Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்போர் மீது குற்ற வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்போர் மீது குற்ற வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்போர் மீது குற்ற வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: சட்டவிரோதமாக வணிக ரீதியில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த விடியல் வீர பெருமாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மினரல் வாட்டர் கம்பெனிகள் அரசிடம் எவ்வித முறையான அனுமதியுமின்றி நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கின்றனர்.

    சில நிறுவனங்கள் அனுமதி பெற்றதைவிட கூடுதலாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சிறிய நீரோடைகள், விவசாய கிணறுகள் மற்றும் குளம் போன்றவற்றிலும் நிலத்தடி நீர் அடி ஆழத்துக்கு சென்று விட்டது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், குடிநீருக்கு பொதுமக்கள் அலையும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரிக்கும் கம்பெனிகள் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றன.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்தும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுத்து உச்சபட்ச இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன், நீர்வளத்துக்காக நிலத்தடி நீர் சுரண்டப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

    இந்த நோக்கத்துக்காக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வணிக ரீதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இதில் தோல்வியடைந்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும்.

    இதனால் சட்டவிரோதமாக வணிக ரீதியில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சட்ட விரோதமாக நிலத்தடி நீர் மட்டும் எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மணல் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் மீது தாக்குதல்: தமிழக பாஜக கண்டனம்

    July 3, 2025
    மாநிலம்

    பாமகவிலிருந்து எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் உறுதி

    July 3, 2025
    மாநிலம்

    அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

    July 3, 2025
    மாநிலம்

    ‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ – அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்

    July 3, 2025
    மாநிலம்

    ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ – விருதுநகர் எஸ்.பி. பேச்சை சுட்டிக்காட்டி அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
    • ஜெய்ஸ்வால், கருண் நாயர் எல்.பி. அவுட் கொடுத்திருந்தால் மேட்சே வேறாகியிருக்கும்: கிறிஸ் வோக்ஸ் ஆதங்கம்
    • செல்வராகவனின் புதிய படம் தொடக்கம்
    • மணல் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் மீது தாக்குதல்: தமிழக பாஜக கண்டனம்
    • டியோகோ ஜோட்டா மரணம்: லிவர்பூல் ஸ்டார் சோகமான கார் விபத்தில் இறக்கிறது ரூட் கார்டோசோவை மணந்த 10 நாட்களுக்குப் பிறகு – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.