Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை எச்சரிக்கை
    உலகம்

    இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை எச்சரிக்கை

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொழும்பு: இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது.

    கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இரண்டு மாதம் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14, 2025 வரை இந்த வருடாந்திர தடைக்காலம் அமலில் இருந்தது. பாக் ஜலசந்தியில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு தடைக்காலம் முடிவடைந்த உடனேயே, தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கத் தொடங்கினர். ஜூன் 30, 2025 அன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து 19 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள) மைலிட்டி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இந்த பிரச்சினையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.

    பல பத்தாண்டுகளாக நீடிக்கும் பாக் ஜலசந்தி மீன்பிடி மோதல் தமிழ்நாட்டிலும், வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள ஏழை மீனவர்களைப் பாதித்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் நோக்கில், 2016-ம் ஆண்டு இந்திய – இலங்கை அரசுகள் ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைத்தன. இந்த குழு, இழுவை மீன்பிடி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

    இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய யாழ்ப்பாண நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மீன்பிடி கிராமமான காரைநகரில் மீனவர் குழுக்களின் கூட்டமைப்பை வழிநடத்தும் கே.ராஜச்சந்திரன், “தடை அமலில் இருந்தபோதும், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக எங்கள் மீனவர்களின் வருமானம் இந்த பருவத்தில் குறைந்துவிட்டது. எங்கள் நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்திய இழுவை படகுகள் திரும்பி வருமோ என்று நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். இப்போது அவை திரும்பி வந்துவிட்டன,” என்று தெரிவித்தார்.

    இரு தரப்பு மீனவர் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதுதான் ஒரே வழி என்று தெரிவித்துள்ள ஊர்காவல்துறை மீனவர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் விரைவில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

    July 3, 2025
    உலகம்

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு

    July 3, 2025
    உலகம்

    ட்ரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது

    July 3, 2025
    உலகம்

    கான்பூரில் இருந்து மெட்டா வரை: இந்திய-ஆரிஜின் ஆராய்ச்சியாளர் டிராபிட் பன்சலின் விண்கல் உயர்வைக் கண்காணித்தல்; ஜுக்கர்பெர்க்கின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் 11 – டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இணைகிறது

    July 3, 2025
    உலகம்

    கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!

    July 2, 2025
    உலகம்

    காசாவில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஹமாஸ்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் கவனிக்கப்படாமல் போகின்றன
    • ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
    • போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
    • யுகே விசா: கூடுதல் விசாக்கள் தேவையில்லை: 10 நாடுகள் இந்தியர்கள் இங்கிலாந்து விசாவுடன் பார்வையிடலாம்
    • ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.