Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தேசிய பொது ஒத்துழைப்பு, குழந்தை மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் மாற்றம்: சாவித்ரிபாய் புலே கவுரவிப்பு
    தேசியம்

    தேசிய பொது ஒத்துழைப்பு, குழந்தை மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் மாற்றம்: சாவித்ரிபாய் புலே கவுரவிப்பு

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேசிய பொது ஒத்துழைப்பு, குழந்தை மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் மாற்றம்: சாவித்ரிபாய் புலே கவுரவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனமானது (National Institute of Public Cooperation and Child Development – NIPCCD) சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (Savitribai Phule National Institute of Women and Child Development) என்று அதிகாரப்பூர்மாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்கள் தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜார்க்கண்டின் ராஞ்சியில் ஒரு புதிய பிராந்திய மையம் 2025 ஜூலை 4 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த மையம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியங்களில் குறிப்பாக கவனம் செலுத்தும் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களான மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா மற்றும் மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 ஆகியவற்றின் சிறப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளை நிறைவு செய்யும்.

    முன்னதாக, இந்த மாநிலங்களின் பயிற்சித் தேவைகள் கவுகாத்தி மற்றும் லக்னோவில் அமைந்துள்ள பிராந்திய மையங்கள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டன. நீண்ட பயண தூரம் காரணமாக பல செயல்பாட்டாளர்களுக்கும் போக்குவரத்து சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி, தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனத்துக்கு சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என மறுபெயரிடுவது இந்தியாவின் முன்னணி சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது என்று கூறினார்.

    புதிய பிராந்திய மையங்களை அமைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், ராஞ்சியில் புதிய பிராந்திய மையத்தின் திறப்பு விழா கிழக்கு பிராந்தியத்தில் பரவலாக்கப்பட்ட, பிராந்திய அளவில் குறிப்பிட்ட திறன் மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் என்று கூறினார்.

    இந்த மையம் நமது முன்னணி செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவை சிறப்பாக அணுகுவதற்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அடிப்படை அளவில் நமது முதன்மை பணிகளை வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா @2047 ஐ நோக்கிய நமது பயணத்தில் எந்தப் பெண்ணோ அல்லது குழந்தையோ பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை தாங்கள் உறுதி செய்வதாக அவர் மேலும் கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    July 3, 2025
    தேசியம்

    ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

    July 3, 2025
    தேசியம்

    ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்

    July 3, 2025
    தேசியம்

    சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி: டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மேலிடத் தலைவரிடம் புகார்

    July 3, 2025
    தேசியம்

    உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்

    July 3, 2025
    தேசியம்

    பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ – விருதுநகர் எஸ்.பி. பேச்சை சுட்டிக்காட்டி அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை
    • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் கவனிக்கப்படாமல் போகின்றன
    • ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
    • போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
    • யுகே விசா: கூடுதல் விசாக்கள் தேவையில்லை: 10 நாடுகள் இந்தியர்கள் இங்கிலாந்து விசாவுடன் பார்வையிடலாம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.