Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை
    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன.

    இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர், 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.

    செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 11 மேக வெடிப்பு சம்பவங்கள், 4 இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவை மண்டி மாவட்டத்தில் நடந்தன. திங்கள்கிழமை மாலை முதல் மண்டியில் மட்டும் 253.8 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களான கோஹர், கர்சோக் மற்றும் துனாக் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 32 மணி நேரத்தில் மட்டும் மண்டியில் இருந்து 316 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமீர்பூரில் 51 பேரும், சம்பாவில் மூன்று பேரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 406 சாலைகள் மூடப்பட்டுள்ளன, அவற்றில் 248 சாலைகள் மண்டியை சேர்ந்தவை. மண்டியில் மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 994 மின்மாற்றிகள் துண்டிக்கப்பட்டுள்ளன என மாநில அரசு தெரிவித்தது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல்துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக மண்டி துணை ஆணையர் அபூர்வ் தேவ்கன் தெரிவித்தார்.

    மண்டியில் உள்ள அனைத்து முக்கிய ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பண்டோ அணையின் நீர்மட்டம் 2,922 அடியாக உயர்ந்து 2,941 அடி எனும் அபாயக் குறியை நெருங்கி வருவதால், அதிலிருந்து 1.5 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஹமீர்பூரில், பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல்லா கிராமத்தில் இருந்து 30 தொழிலாளர்கள் உட்பட 51 பேர் மீட்கப்பட்டனர்.

    ஜூன் 20 ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து இமாச்சலப் பிரதேசம் ரூ.500 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    July 3, 2025
    தேசியம்

    ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

    July 3, 2025
    தேசியம்

    ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்

    July 3, 2025
    தேசியம்

    சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி: டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மேலிடத் தலைவரிடம் புகார்

    July 3, 2025
    தேசியம்

    உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்

    July 3, 2025
    தேசியம்

    பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ – விருதுநகர் எஸ்.பி. பேச்சை சுட்டிக்காட்டி அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை
    • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் கவனிக்கப்படாமல் போகின்றன
    • ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
    • போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
    • யுகே விசா: கூடுதல் விசாக்கள் தேவையில்லை: 10 நாடுகள் இந்தியர்கள் இங்கிலாந்து விசாவுடன் பார்வையிடலாம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.