Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் – பின்னணி என்ன?
    மாநிலம்

    பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் – பின்னணி என்ன?

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் – பின்னணி என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தென்காசி: சங்கரன்கோவிலில் நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. வாக்கெடுப்பில் 28 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.

    தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளை கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 9 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

    திமுக சார்பில் உமா மகேஸ்வரி, அதிமுக சார்பில் முத்துலெட்சுமி ஆகியோர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ, சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்தன. இருவரும் சமநிலை அடைந்ததால் குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் (எ) ராஜு என்பவர் உள்ளார்.

    ஒரு சில மாதங்கள் மட்டுமே நகராட்சி கூட்டம் அமைதியாக நடைபெற்றது. பின்னர் நகராட்சி தலைவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் நகராட்சி கூட்டங்களில் வாக்குவாதம், தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்களும் இணைந்து நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது இந்த பிரச்சினையில் திமுக தலைமை தலையிட்டு, சமரசப்படுத்தியதால் நகராட்சி தலைவரின் பதவி தப்பியது.

    இருப்பினும் தொடர்ந்து புகைச்சல் இருந்து வந்தது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, நகராட்சியில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 பேர் கையெழுத்திட்டு, நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடந்த மாதம் 2-ம் தேதி நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

    இதையடுத்து, திமுக தலைமை இரு தரப்பையும் அழைத்து பேசி, சமாதான முயற்சிகளை முன்னெடுத்தது. திமுகவைச் சேர்ந்தவர் பதவியை இழந்தால் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் பொறுப்பை திமுக தலைமை ஒப்படைத்தது. நகராட்சி தலைவர் மீது மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கூட்டம் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவர் பங்கேற்கவில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவு என்ன ஆகும் என்று முன்கூட்டியே ஊகிக்க முடிந்தது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். திமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் மட்டுமே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து, அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்களும் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து வெற்றி பெறச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

    July 3, 2025
    மாநிலம்

    மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

    July 3, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் காகித வடிவிலேயே உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்

    July 3, 2025
    மாநிலம்

    திருப்புவனம் சம்பவம் நடந்த 2 நாளில் சட்ட நடவடிக்கைகள்: ஆர்.எஸ்.பாரதி தகவல்

    July 3, 2025
    மாநிலம்

    சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டும் பணி தீவிரம்

    July 3, 2025
    மாநிலம்

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
    • யுகே விசா: கூடுதல் விசாக்கள் தேவையில்லை: 10 நாடுகள் இந்தியர்கள் இங்கிலாந்து விசாவுடன் பார்வையிடலாம்
    • ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
    • மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு
    • புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன: காரணங்கள், அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் அதைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.