Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு
    மாநிலம்

    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: கூடுதல் நன்கொடை கேட்டு கடை உரிமையாளர், ஊழியர்களைத் தாக்கியதைக் கண்டித்து மேலூரில் வர்த்தகர்கள் நேற்று கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலவளவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 28-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதற்காக நன்கொடை வசூலிக்க மேலூர் பேருந்து நிலையம் அருகே பலசரக்கு மொத்த வியாபாரி திருப்பதியின் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் சென்றனர். நன்கொடை குறைவாகக் கொடுத்ததாகக் கூறி கட்சியினர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்பி சிவக்குமார், ஆய்வாளர்கள் சிவசக்தி, ஜெயந்தி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசம் செய்தனர். பின்னர் விசாரணைக்காக கடை உரிமையாளரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால் மேலூர் வணிகர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று உரிமையாளர் திருப்பதி மற்றும் அவரது ஊழியர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி டிஎஸ்பியிடம் மனு அளித்தனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேலூர் பகுதியிலுள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பலசரக்குக் கடைகள், உணவகங்கள் என 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து மேலூர் வணிகர் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ‘நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிக்கச் சென்ற சிலர் வர்த்தகர் திருப்பதியை தாக்கி கடையைச் சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து கடை அடைப்புப் போராட்டம் நடத்தினோம்.

    இது குறித்து ஆட்சியர், எஸ்பியிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்’ என்றார்.

    விசிக மேலூர் தொகுதி அமைப்பாளர் சீராளன் கூறுகையில், ‘மேலவளவு நினைவேந்தலையொட்டி எங்களது கட்சியைச் சேர்ந்த கங்காதரன் உள்ளிட்ட 3 பேர் நன்கொடை கேட்டுச் சென்றனர். அவர் குறைந்த தொகை வழங்கியதால் வேண்டாம் என மறுத்து வந்துவிட்டனர்.

    இருப்பினும், கடை உரிமையாளரின் மகன், கங்காதரனுக்கு போன் செய்து தகாத வார்த்தையால் திட்டியால் அங்கு சென்ற எங்களது கட்சியினருக்கும், கடைக்காரர், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நானும் அங்கு சென்று சமரசம் செய்ய முயன்றபோது, என்னைத் தாக்க முயன்றனர். நானும் போலீஸில் புகார் கொடுத்தேன்.’ என்றார். இதுகுறித்து மேலூர் காவல்துறை யினரிடம் கேட்டபோது, `இருதரப்பு புகார்கள் மீதும் விசாரித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

    July 1, 2025
    மாநிலம்

    காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

    July 1, 2025
    மாநிலம்

    ‘சாரி’தான் பதிலா? அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா? – முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை
    • முடி வளர்ச்சிக்கு ஃபிட்காரியை எவ்வாறு பயன்படுத்துவது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?
    • காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
    • குடல் ஆரோக்கியம்: செரிமான பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஹார்வர்ட் டாக்டர் இயற்கையாகவே குடலை குணப்படுத்தக்கூடிய 6 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.