Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

    காஷ்மீரில் உள்ள பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலை மத்​திய அரசு நடத்​தி​யது. இந்​நிலை​யில், இந்​திய எல்​லைகள் மற்​றும் எதிரி நாடு​களின் நிலப்​பரப்​பு​களை தொடர்ந்து கண்​காணிக்​க​ 52 கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​களை விண்​ணில் ஏவும் பணியை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது.

    இந்த திட்​டத்தை மத்​திய அரசு கடந்த ஆண்டே முடிவு செய்​தது. மேலும், ராணுவத்​துக்​காக மட்​டும் பிரத்​யேக​மாக விண்​வெளி கொள்​கையை கொண்டு வரவும் மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. அதன்​படி விண்​ணில் இருந்து கண்​காணிக்​கும். 3-ம் கட்ட திட்​டத்​துக்கு கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது.

    ரூ.26,968 கோடி: இத்​திட்​டம் ரூ.26,968 கோடி செல​வில் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதில் 21 செயற்​கைக் கோள்​கள் தயாரிப்பு மற்​றும் விண்​ணில் ஏவும் பணியை இஸ்​ரோ​வும், 31 செயற்​கைக் கோள்​கள் மற்​றும் விண்​ணில் ஏவும் பணியை தனி​யார் நிறு​வனங்​களும் மேற்​கொள்​ளும்.

    அடுத்த ஆண்டு ஏப்​ரல் மாதத்​துக்​குள் முதல் கட்​ட​மாக சில கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​கள் விண்​ணில் ஏவப்​படும். வரும் 2029-ம் ஆண்​டுக்​குள் மொத்​தம் 52 செயற்​கைக் கோள்​களும் விண்​ணில் ஏவப்​பட்டு விடும். இதற்​கான பணி​களை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. மேலும், செயற்​கைக் கோள் ஏவும் ஒப்​பந்​தத்​தைப் பெற்​றுள்ள 3 தனி​யார் நிறு​வனங்​கள், தங்​கள் பணி​களை விரைவுப்​படுத்த மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

    இந்​திய கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​கள் விண்​ணில் ஏவப்​பட்ட பிறகு, சீனா, பாகிஸ்​தானின் நிலப்​பரப்பு மற்​றும் இந்​திய பெருங்​கடல் பகு​தி​களை தொடர்ந்து 24 மணி நேர​மும் துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும். பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, இந்​தி​யா​வின் கார்​டோசேட் செயற்​கைக் கோள் மிக முக்​கிய பங்கு வகித்​தது. பாகிஸ்​தானில் ராணுவத்​தின் நடமாட்​டங்​களை இந்த செயற்​கைக்​கோள் கண்​டறிந்து இந்​திய பாது​காப்​புப்​ படைகளுக்​கு வழங்​கியது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 2, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
    • பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    • ‘நடக்கக் கூடாதது நடந்துவிட்டது…’ – அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
    • ‘பணம் இல்லாத 7 நாட்கள்’: மர்மமான காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய -ஆரிஜின் சிட்னி டீனேஜர் அனிஷா சதிக் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.