Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி
    மாநிலம்

    விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை / திருப்புவனம்: சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதி​முக வழக்​கறிஞர்​கள் மாரீஸ்​கு​மார், ராஜ​ராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்​புரம் காளி கோயில் காவலர் அஜித்​கு​மார் போலீஸ் காவலில் இறந்த விவ​காரம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்​து, உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை முன்​வைத்​தனர்.

    அப்​போது அவர்​கள், “மடப்​புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒரு​வரின் காரில் இருந்த நகைகள் திருடப்​பட்​ட​தாக திருப்​புவனம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் கோயில் காவல​ரான அஜித்​கு​மாரை போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போது அவரை போலீ​ஸார் கடுமை​யாகத் தாக்​கிய​தில், அவர் உயிரிழந்தார்.

    இது​போன்ற சட்​ட​விரோத காவல் மரணங்​களை ஏற்க முடி​யாது. இது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​து, உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்” என்​றனர். பின்​னர் நீதிப​தி​கள், “கடந்த 4 ஆண்​டு​களில் 24 காவல் மரணங்​கள் நிகழ்ந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. அஜித்​கு​மார் என்ன தீவிர​வா​தி​யா? ஆயுதம் ஏந்தி தாக்​கி​னால், தற்​காப்​புக்​காக போலீ​ஸார் தாக்​குதல் நடத்​து​வதை ஏற்​கலாம். அவ்​வாறு இல்​லாமல், சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அவரை தாக்​கியது ஏன் எனத் தெரிய​வில்​லை. இவ்​விவ​காரம் தொடர்​பாக மனு தாக்​கல் செய்​தால், விசா​ரித்து உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்” என்​றனர்.

    இதையடுத்​து, மடப்​புரம் கோயில் காவலர் உயி​ரிழப்பு வழக்கு தொடர்​பாக உரிய விசா​ரணை நடத்​த​வும், போலீ​ஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்​ய​வும் கோரி அதி​முக வழக்​கறிஞர் பிரிவு மாநில துணைச் செய​லா​ளர் மாரீஸ்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு இன்று விசா​ரணைக்கு வரு​கிறது.

    குற்றவியல் நடுவர் விசாரணை: இதற்கிடையில், அஜித்​கு​மாரை போலீ​ஸார் தாக்​கிய​தாகக் கூறப்​பட்ட மடப்​புரம் கோயில் பகு​தி​யில் மாவட்ட உரிமை​யியல் மற்​றும் குற்​ற​வியல் நடு​வர் வெங்​கடேஷ்பிர​சாத் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டார். அப்​போது அங்​கிருந்த பெண்​கள், முறை​யாக விசா​ரணை நடத்த வேண்​டுமென அவரிடம் முறை​யிட்​டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில், ராம​நாத​புரம் சரக டிஐஜி மூர்த்தி நேற்று ஆலோ​சனை நடத்​தினர். அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பிரேதப் பரிசோதனை அறிக்​கை, குற்​ற​வியல் நடு​வர் விசா​ரணை அறிக்கை அடிப்​படை​யில் மேல்​நட​வடிக்கை எடுக்கப்படும்” என்​றார்.

    சிபிஐ விசாரிக்க வேண்டும்: திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்த அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினரைச் சந்​தித்து ஆறு​தல் கூறிய பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ரா​ஜா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அஜித்​கு​மார் உயி​ரிழந்த சம்​பவத்​தில் 6 காவலர்​களைப் பணி​யிடை நீக்​கம் செய்​தது போதாது. அவர்​கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்​டும்.

    அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு நிவாரணம் கொடுக்​காதது ஏன்? சாத்​தான்​குளத்​தில் இரு​வரை போலீ​ஸார் அடித்​துக் கொன்​ற​போது கனி​மொழி, மு.க.ஸ்​டா​லின் அங்கு சென்​றனர். அஜித்​கு​மார் இந்து என்​ப​தால் இங்கு வரவில்​லை​யா? அதனால்​தான் நிவாரணம் தரவில்​லை​யா?

    சிபிஐ விசா​ரணை நடத்​தி​னால்​தான் நியா​யம் கிடைக்​கும். மடி​யில் கனம் இல்லை என்​பதை நிரூபிக்க முதல்​வர் சிபிஐ விசா​ரணைக்​குப் பரிந்​துரை செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இதே​போல, அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பாக தீவிர விசாரணை நடத்​தி, சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டுமென தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி, ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்து உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

    July 1, 2025
    மாநிலம்

    ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    July 1, 2025
    மாநிலம்

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    • ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
    • புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி
    • பீட்ரூட் சாறு முதல் எலுமிச்சை நீர் வரை: சிறந்த ஹார்வர்ட் டாக்டர் கல்லீரல் ஆரோக்கியத்திற்காக 9 சிறந்த மற்றும் மோசமான பானங்கள்
    • பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.