Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    மாநிலம்

    சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள் ஊடகங்​களுக்கு தெளி​வாக விளக்​கமளித்து வதந்​தி​கள் பரவுவதை தடுக்க வேண்​டும் என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​யுள்​ளார்.

    சென்னை தலை​மைச்​செயல​கத்​தில், முதல்​வர் தலை​மை​யில் சட்​டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட காவல்​துறை உயர் அலு​வலர்​களு​டன் ஆலோ​சித்​தார். அப்​போது மண்டல காவல்​துறை ஐஜி-க்​கள் தங்​கள் மண்​டலங்​களில் குற்​றத்​தடுப்பு தொடர்​பாக மேற்​கொள்​ளப்​பட்ட முயற்​சிகள் குறித்து விளக்​கினர்.

    கூட்​டத்​தில் முதல்​வர் பேசி​ய​தாவது: மாநிலத்​தில் சட்​டம் ஒழுங்​கு, பொது அமை​தியை அரசு கவன​மாக கையாண்டு வரு​கிறது. அரசு எடுத்த நடவடிக்​கைகள் மூலம் தமிழகத்​தின் தொழில் வளர்ச்​சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்​சாலைகள், புதிய வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரித்​துள்​ளன. தமிழகம் அமை​தி​யான மாநில​மாக திகழ காவல்​துறை​யின் பங்​களிப்பு முக்​கிய​மான​தாக விளங்கு​கிறது.

    மேலும், காவல் நிலை​யங்​களுக்​குப் புகார் கொடுக்க வரும் அனைத்து பொது​மக்​களிட​மும் கண்​ணி​யத்​தோடு நடந்து கொண்​டு, புகார்​கள் மீது குறிப்​பிட்ட காலத்​துக்​குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். போதைப் பொருள் நடமாட்​டத்தை கட்​டுப்​படுத்த தீவிரம் காட்ட வேண்​டும்.

    சட்​டம்- ஒழுங்கு தொடர்​பான முக்​கியப் பிரச்​சினை​கள் ஏற்​படும்​போது காவல்​துறை உயர் அலு​வலர்​கள் உடனடி​யாக ஊடகங்​களுக்கு அப்​பிரச்​சினை குறித்து தெளி​வாக விளக்​கமளித்​து, வதந்தி பரவுவதை தடுக்க வேண்​டும். சாதி, சமய பூசல்​களில் ஈடு​படு​வர்​கள், வதந்தி மற்​றும் வெறுப்​புணர்வை பரப்பி அமை​திக்கு குந்​தகம் விளை​விப்​பவர்​கள் மீதான வழக்​கு​களில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும். காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம்​-ஒழுங்கை பேணிப் பாது​காத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும். இவ்​வாறு அறி​வுறுத்​தி​னார்.

    இக்​கூட்​டத்​தில், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், உள்​துறை செயலர் தீரஜ்கு​மார், டிஜிபி சங்​கர் ஜிவால், பொதுத்​துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், டிஜிபி (நிர்​வாகம்) ஜி.வெங்​கட்​ராமன், ஏடிஜிபி சட்​டம்- ஒழுங்கு டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சென்னை காவல் ஆணை​யர் ஆ.அருண் ஆகியோர் பங்​கேற்​றனர். காணொலிக் காட்சி வாயிலாக மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார், மேற்கு மண்டல ஐஜி டி.செந்தில் குமார், தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

    சமூக வலைதள பதிவு: இதனிடையே மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூகவலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: குற்​றங்​கள் நடக்​காமல் தடுக்க வேண்​டும். மீறி நடந்​தால் அதில் ஈடு​பட்​ட​வர் ரவுடி​யா​னாலும், அரசி​யல் பின்​புலம் கொண்​ட​வ​ரா​னாலும், காவலரே ஆனாலும் அதற்​கான தண்​டனையை பெற்​றுத் தந்து நீதி நிலை​நாட்​டப்​படும் ஆட்​சி​யாக திமுக அரசு திகழ்​கிறது.

    போதைப்​பொருள், கள்​ளச்​சா​ரா​யம், பெண்​கள் பாது​காப்​பு, லாக்​கப் மரணங்​கள் போன்​றவற்​றில் யார் கடமை தவறி​னாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வுக் கூட்டத்தில் வலி​யுறுத்​தினேன். இவ்​வாறு கூறியுள்​ளார்.

    பதவி உயர்வு ஆணை வழங்கல்: காவலர்களுக்கான தற்​போதுள்ள பதவி நிலை உயர்​வுத்திட்​டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காவலர்​களுக்​கான நிலை உயர்த்​துதல் ஆணை​யினை செயல்​படுத்​தும் வகை​யில், ஒவ்​வொரு மாநகர காவல் ஆணை​யரகத்துக்கு உட்​பட்ட 10 முதல்​நிலை காவலர்​கள், ஒவ்​வொரு காவல் சரகத்​துக்கு உட்​பட்ட மாவட்டங்​களில் 11 முதல் ​நிலை காவலர்​கள் என மொத்​தம் 21 முதல்​நிலை காவலர்​களுக்கு தலைமை காவலர்​களாக பதவிநிலை உயர்வு ஆணை​களை நேற்று முதல்​வர் வழங்​கி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

    July 1, 2025
    மாநிலம்

    “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி

    July 1, 2025
    மாநிலம்

    காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: ஆப்பிள் அல்லது மனிதர்கள்? நீங்கள் தர்க்கரீதியான அல்லது உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தால் முதலில் காண்பது முதலில் காட்டுகிறது – இந்தியாவின் நேரங்கள்
    • ’கண்ணப்பா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி: மோகன்பாபு உற்சாகம்
    • அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!
    • முடிட் டானி யார், அவரது திருமணம் ஏன் செய்திகளில் அதிகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.