Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை கடந்த மார்ச் 25-ம் தேதி மாலை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன. இந்த இல்லம் புராதண முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில், பாரதியார் இல்லத்தை புதுப்பிக்க பொதுமக்களிடம் யாசகம் பெற்று மாநில அரசுக்கு நிதி வழங்க உள்ளோம் என ஒன்றிய பாஜக தலைவர் டி.சரவணக்குமார் அறிவித்தார். இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை வட்டாட்சியர் சுபா தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தையில் தொல்லியல் துறை, மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லையென கூறி, பாஜகவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர்.

    ஜூன் 30-ம் தேதி, பாரதியார் இல்லத்தை புதுப்பிக்க பொதுமக்களிடமிருந்து யாசகம் பெற்று அந்த நிதியை மாநில அரசுக்கு அனுப்பி வைப்போம் என பாஜகவினர் தெரிவித்தனர்.

    அதன்படி, இன்று மாலை ஆன்மிக பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ராம்கி, இளம்புவனம் பாஜக கிளைச் செயலாளர் காளிராஜ் உள்ளிட்டோர் பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு எதிரே உள்ள பிரதான பஜாரில் உள்ள கடைகளுக்கு சென்று யாசகம் பெற்றனர்.

    அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் கோபால் தலைமையிலான போலீஸார், பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்து, யாசகம் பெற்ற பாத்திரத்தையும் கைப்பற்றினர்.

    இதனிடையே, பாரதியார் மணிமண்டபம் முன்பு, பாஜக ஒன்றிய தலைவர் டி.சரவணக்குமார், மாநில பொதுச்செயலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட துணை தலைவர் ஆத்திராஜ், நெசவாளர் அணி அமைப்பாளர் நாகராஜன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய கண்ணன் உள்ளிட்ட பலர் பாரதியார் இல்லத்தை புதுப்பிக்க வலியுறுத்தி கோஷமிட்டு, யாசகம் பெற புறப்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    மாநிலம்

    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையம் அமைக்க மாநகராட்சி அனுமதி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!
    • காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    • கொழுப்பு கல்லீரல்: நீங்கள் பொருத்தமாக இருக்கிறீர்களா என்று சரிபார்க்க 5 எளிய பயிற்சிகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • ‘இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்’ – நேதன் லயன் ஆசை!
    • அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.