Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
    தேசியம்

    மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சூரசந்த்பூர்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

    சூரசந்த்பூர் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள மோங்ஜாங் கிராமத்துக்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து காரை நோக்கி சுட்டதாக சூரசந்த்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

    இறந்தவர்கள் தெங்கோதாங் ஹாக்கிப் என்கிற தஹ்பி (48), சீகோகின் (34), லெங்கோஹாவ் (35) மற்றும் பால்ஹிங் (72) என அடையாளம் காணப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவ இடத்திலிருந்து 12-க்கும் மேற்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை மற்றும் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஏற்கெனவே நடந்த கலவரங்களின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    மணிப்பூர் கலவர பின்புலம்: மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன.

    இந்த கலவரத்தில் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர். 1,108 பேர் காயம் அடைந்தனர். 60 ஆயிரம் பேர் தாங்கள் வசித்த பகுதிகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங், கடந்த பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்: பிரதமர் மோடி உறுதி

    August 24, 2025
    தேசியம்

    “பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை, ஆனால்…” – கிரண் ரிஜிஜு தகவல்

    August 23, 2025
    தேசியம்

    “ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவா?” – பதவி பறிப்பு மசோதா விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் கேள்வி

    August 23, 2025
    தேசியம்

    இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து

    August 23, 2025
    தேசியம்

    அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் ஆக.25 முதல் நிறுத்தம்: ட்ரம்ப்பின் 50% வரிக்கு இந்தியா பதிலடி

    August 23, 2025
    தேசியம்

    “இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையம் நிறுவும்” – பிரதமர் மோடி தகவல்

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரையில் குப்பை தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்
    • தமிழக டிஜிபி நியமன தாமதத்தில் உள்நோக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு
    • திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
    • டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல்
    • வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்: பிரதமர் மோடி உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.