Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மவுனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சொத்து வரியைக் குறைத்து முறைகேடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்களில் நீண்ட காலம் வருவாய்ப் பிரிவு கணினி தொழில்நுட்பங்களைக் கையாண்ட முக்கிய ஊழியர் ஒருவரையும், மண்டலத் தலைவர்கள் சிலரையும் போலீஸார் விசாரணைக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால், மண்டலத் தலைவர்களை விசாரணைக்கு அழைக்க விடாமல் மாநகர் ஆளும் கட்சி முக்கியப் புள்ளி, போலீஸாருக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜரானால் தங்கள் எதிர்கால அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என சில மண்டலத் தலைவர்கள் அந்த முக்கியப் புள்ளியிடம் முறையிட்டுள்ளனர். தற்போது அந்த மாநகர் ஆளும்கட்சி அதிகாரப் புள்ளி வழிகாட்டுதலில்தான், மண்டலத் தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் பலர் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் மாவட்டச்செயலாளர் மா.கணேசன் வெளியிட்ட அறிக்கையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என யாராக இருந்தாலும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கூட்டணிக் கட்சியே நேரடியாக அறிக்கை விட்டது மாநகர் திமுகவுக்கும், அதன் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதன் மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக அழுத்தமாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தாமல் மவுனம் காப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மாநகராட்சி வரி குறைப்பு முறைகேட்டை 2024-ம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமாரிடமே மனுக் கொடுத்து முதலில் எதிர்ப்பைப் பதிவு செய்தது அதிமுகதான். அதன் அடிப்படையில்தான் அவரே, கடந்த ஆண்டு சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.

    தற்போது, மாநகராட்சி முறைகேடு விவகாரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி வருகிறோம். இதுதொடர்பாக மாநகர் அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் 15 கவுன்சிலர்கள், நிர்வாகிகள் ஒன்று திரண்டு புகார் மனு கொடுக்க மாநகராட்சி ஆணையரை வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

    வெளிப்படையான விசாரணைக்கும், முறைகேட்டில் தொடர்புடைய மண்டலத் தலைவர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க செல்லூர் கே. ராஜூ திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    மாநிலம்

    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

    July 1, 2025
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    July 1, 2025
    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா
    • போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.