Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்
    மாநிலம்

    பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​வி​ராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை​போல நாம் அனை​வரும் பெண் கல்​வி, ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்கு உதவ வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்வி கூறி​னார். விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை சார்​பில், பத்​மஸ்ரீ விருதுபெற்ற ஸ்த​பதி தேவ.​ரா​தா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரி​யார் நகரில் நேற்று நடை​பெற்​றது. அறக்​கட்​டளை நிறு​வனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.​வித்​யாதரன் தலைமை வகித்​தார்.

    சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்​வி,ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணனை கவுர​வித்​தார். தொடர்ந்​து, அறக்​கட்​டளை சார்​பில் ஏராள​மான பெண் பயனாளி​களுக்கு கல்​வி, மருத்​துவ உதவித்​தொகை, கண் கண்​ணாடி, தையல் இயந்​திரங்​களை வழங்​கி​னார்.

    பின்​னர் நீதிபதி பேசி​ய​தாவது:விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை, பெண் குழந்​தைகள் கல்விக்​காக​வும், ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​காக​வும் ஆண்​டு​தோறும் ஏராள​மான உதவி​களை செய்து வரு​கிறது. இந்த அறக்​கட்​டளை​போல நாமும் ஏழை பெண்​களின் கல்​வி, வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​காக முடிந்த உதவி​களை செய்ய வேண்​டும். ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணன் வடிவ​மைத்த சிற்​பம் ஜி-20 மாநாட்​டுக்கே பெரு​மையை தேடித்​தந்​தது. அதனாலேயே பத்​மஸ்ரீ விருதும் அவரை தேடிவந்​தது. நமது பண்​பாட்​டை​யும், கலாச்​சா​ரத்​தை​யும் நாம் போற்​றிப் பாது​ காக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    ஜி-20 மாநாட்டில் சிலை: ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணன் பேசும்​போது, “ஜி-20 மாநாட்​டில் 40 அடி உயரத்​தில் சிலை வைக்க வேண்​டும். அதை பாரம்​பரிய ஸ்த​பதி ஒரு​வர்​தான் செய்ய வேண்​டும் என்று பிரதமர் மோடி விரும்​பி​னார். நான் சிற்ப சாஸ்​திர முறைப்​படி, பாரதம், பாரதப் பிரதமர் என்ற சொற்​களு​டன், 27 அடி உயர நடராஜர் சிலையை அமைக்​கப் பரிந்​துரைத்​தேன்.

    அதை பிரதமர் ஏற்​றுக்​ கொண்​டார். அவர், கலைஞர்​களின் தொழில் உரிமை​யை, பாரம்​பரிய நடை​முறை​களை மதிப்​பவர்” என்​றார். அறக்​கட்​டளை நிறு​வனர் கே.பி.​வித்​யாதரன் பேசும்​போது, “முன்பு நல்ல நாள் பார்த்​து, தோப்​புக்​குச் சென்​று, ஆண் மரமா, பெண் மரமா என்று தேர்வு செய்​து, வீடு​களுக்கு மரங்​களை அறுப்​பார்​கள். அதனால்​தான் அந்​தக் காலத்து வீடு​களும், கோயில் கதவு​களும் நீண்​ட​காலம் உறு​தி​யாக இருந்​தன.

    அந்த வீடு​களில் வசிப்​போரும் பல தலை​முறை​கள் சிறப்​பாக வாழ்ந்​தனர். இன்று பட்​டறை​யில் கிடைத்த மரங்​களை​யும், ரெடிமேடு கதவு​களை​யும் பயன்​படுத்​துகின்​றனர். திரு​மணத்​துக்கு தாலியை ரெடிமே​டாக வாங்கி அணிந்து கொள்​கின்​றனர். அந்​தக் காலத்​தில் நல்ல நாள், நேரம் பார்த்​து, தங்​கத்தை உருக்கி தாலி செய்​த​தால், அதை வாங்​கு​வோரின் குடும்ப வாழ்க்கை சிறப்​பாக இருந்​தது. எனவே, நமது பாரம்​பரிய மரபு​களை அனை​வரும் கடைபிடிக்க வேண்​டும்” என்​றார். இந்த நிகழ்ச்​சி​யில் தெய்​வ​நாயகி ரா​தாகிருஷ்ணன், விஜய லட்​சுமி வித்​யாதரன், டாக்​டர் வி.விஜயசந்​தர் வித்​யாதரன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்டனர்.​



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    புதுச்சேரி: பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த விமானம் ரத்து!

    June 30, 2025
    மாநிலம்

    “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 

    June 30, 2025
    மாநிலம்

    இடம் தயார், பணமும் தயார்… தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? – செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு

    June 30, 2025
    மாநிலம்

    இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?
    • இதயத்தின் வயதானது மீளக்கூடியதா? புதிய ஆய்வு ‘ஆம்’ என்று கூறுகிறது; இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க சில வாழ்க்கை முறை உதவிக்குறிப்புகள் இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்
    • ஆப்டிகல் மாயை: மிகவும் கவனிக்கும் கண்கள் மட்டுமே இறகுகளை வேகமாகக் காணும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதுச்சேரி: பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த விமானம் ரத்து!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.