Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்
    மாநிலம்

    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திமுக கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்ய அவசி​யமில்லை என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்​வாகக் குழு கூட்​டம் கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ் தலை​மை​யில் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுச்​செய​லா​ளர் வைகோ சிறப்​புரை ஆற்​றி​னார்.

    பொருளாளர் மு.செந்​தில​திபன், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் மல்லை சத்​யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடு​துறை இரா.​முரு​கன், தி.​மு.​ராஜேந்​திரன், ரொஹையா மற்​றும் நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: தமிழகத்தை வளர்ச்​சிப் பாதை​யில் முன்​னெடுத்​துச் செல்​லும் திமுக அரசு தொடர​வும், இந்​துத்​துவ மதவாத சக்​தி​களை முறியடிக்​க​வும் கூட்​டணி என்ற மதி​முக எடுத்த முடிவை வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் கடைப்​பிடிப்​போம்.

    அரசி​யலமைப்​பில் மதச்​சார்​பற்ற, சோசலிச எனும் வார்த்​தைகளை நீக்க வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் கூறி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. முரு​கன் மாநாட்​டில் பெரி​யார், முன்​னாள் முதல்​வர் அண்​ணாதுரையை சிறுமைப்​படுத்தி வெளி​யான காணொலிக்கு கடும் கண்​டனம். திருச்​சி​யில் நடை​பெறவுள்ள முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்​து​வதற்​கும், தேர்​தல் வேலைகளை முன்​னெடுக்​க​வும் ஜூலை 1 முதல் 17-ம் தேதி வரை​யில் நடை​பெறும் மண்டல வாரி​யான செயல்​வீரர்​கள் கூட்​டங்​களை திட்​ட​மிட்டு மாவட்ட அமைப்​பு​கள் செய​லாற்ற வேண்​டும் என்பன உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி அரசுக்கு அவசி​யமில்​லாத வகை​யில் திமுக வெற்றி பெறு​வதற்​காக மதி​முக பாடு​படு​ம். பெண்​களின் வாக்​கு​களில் 90 சதவீதம் திமுகவை சென்​றடை​யும். இரட்டை இலக்​கத்​தில் தொகு​தி​கள் கேட்​போம் என கூட்​டத்​தில் நான் சொல்​ல​வில்​லை. கட்சி அங்​கீ​காரத்​துக்கு 8 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் இருக்க வேண்​டும். இதற்​காக தோ​ராய​மாக 12 தொகு​தி​களில் போட்​டி​யிடலாம் எனவும், முடிவு தலைமை எடுக்​கும் எனவும் முதன்​மைச் செய​லா​ளர் கூறி​யிருந்​தார்.

    இந்​துத்​துவா சக்​தி​கள் தமிழகத்​தில் காலூன்​றக் கூடாது என்​ப​தற்​காக​வும் திரா​விட இயக்​கத்தை பாது​காப்​ப​தற்​காக​வும் திமுக​வுடன் கூட்​டணி அமைத்​தோம். தற்​போதும் அதே நிலைப்​பாட்​டில் இருக்​கிறோம். அதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டிய அவசி​யமில்​லை. தமிழக மக்​களின் முக்​கிய பிரச்​சினை​களுக்கு போ​ராடி மதி​முக வெற்றி பெற்​றிருக்​கிறது. மதி​முக​வினர் விரக்​தி​யில் இல்​லை. எந்​தச் சூழ்​நிலைக்​கும் தயா​ராக இருப்​போம். வரும் தேர்​தலில் அதி​முக, பாஜக கூட்​டணி வெற்றி பெறாத நிலை​யில், மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறும் கூட்​டணி ஆட்சி குறித்து சிந்​திக்​க வேண்​டிய​தில்​லை. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்

    June 30, 2025
    மாநிலம்

    “ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு

    June 30, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

    June 30, 2025
    மாநிலம்

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    June 30, 2025
    மாநிலம்

    திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனார் (மாதுளை) vs புளூபெர்ரி: எது ஆரோக்கியமானது?
    • நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு
    • இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்
    • உடற்பயிற்சியை விரும்புவதற்கு உங்கள் மூளைக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும்? விஞ்ஞானிகளுக்கு பதில் உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.