Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

    சாகித்ய அகாடமி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    ‘முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிதை, புனைகதை, செவ்வியல், நாடகம், திரை வசனம், உரைநடை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    கருணாநிதி பன்முகத் திறன் பெற்றவர் என்பதை இது காட்டுகிறது. அவர் தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர். வாழ்வையே தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால்தான் 5 முறை தமிழக முதல்வராக அவரால் இருக்க முடிந்தது.

    இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார். ‘எனது செங்கோலை பறித்துவிடலாம். ஆனால், எனது எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது’ என்றார். இலக்கியவாதிகளுக்காக கருணாநிதி ஏராளமான பணிகளை செய்தார். அவர் முதல்வராக இருந்தபோது, 108 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, நூல் உரிமை தொகையாக ரூ.7.76 கோடி வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, கடந்த 4 ஆண்டுகளில் எனது ஆட்சியில் 36 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, நூல் உரிமை தொகையாக ரூ.425 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளிகளுக்கு வீடு வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டத்தை தமிழக அரசு கடந்த 2022-ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் இதுவரை 25 பேருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கருத்தரங்கம் கருணாநிதியின் புகழ்பாடுவதாக மட்டும் இல்லாமல், அவர் விரும்பிய சமத்துவம், முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பயன்பட வேண்டும். தமிழ் சமூகத்தில் கருணாநிதி போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

    படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும், அங்கீகரிக்க வேண்டும். அதுதான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். இதைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது. சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்த பணியை தொய்வின்றி தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

    அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாடமி செயலர் சீனிவாச ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாணவர்களால் சலசலப்பு: நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகளை வீடியோ எடுக்கும்போது, முன்வரிசையில் இருந்த மாணவர் ஒருவர் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்தார். அதில், தவெக தலைவர் விஜய் படம் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. உற்சாக குரல் எழுப்பிய 3 மாணவர்களை அரங்கத்தில் இருந்து போலீஸார் வெளியேற்றினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

    June 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி

    June 30, 2025
    மாநிலம்

    மதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா பாஜக? – நாராயணன் திருப்பதி நேர்காணல்

    June 30, 2025
    மாநிலம்

    அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

    June 30, 2025
    மாநிலம்

    பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்

    June 30, 2025
    மாநிலம்

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷகா அல்லது சங்கு ஷெல் ஏன் இந்து சடங்குகளிலும் பல்வேறு வகையான ஷாங்காக்களிலும் ஊதப்படுகிறது
    • ‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா
    • இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை
    • விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?
    • செல்லப்பிராணி முயலைப் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்: பராமரிப்பு உதவிக்குறிப்புகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.