Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு
    தேசியம்

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

    adminBy adminJune 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். அதன்​படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நீண்ட காலத்​துக்​கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்​திரை மீண்​டும் தொடங்​கியுள்ளது.

    ஜூலை 3-ம் தேதி அமர்​நாத் புனித யாத்​திரை தொடங்க இருக்​கிறது, ஒடி​சா, குஜ​ராத் உட்பட பல்​வேறு மாநிலங்​களில் ஜெகந்​நாதர் ரத யாத்​திரை நடை​பெறுகிறது. வடக்​கு, தெற்​கு, கிழக்​கு, மேற்கு என்ற பாகு​பாடு இன்றி லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரைகளில் பங்​கேற்​கின்​றனர். இதன்​மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு மேலோங்​கு​கிறது.

    2 புதிய சாதனை​கள்: நமது நாட்​டின் 2 புதிய சாதனை​களை உங்​களோடு பகிர்ந்துகொள்ள விரும்​பு​கிறேன். கண்​களை பாதிக்​கும் ட்ராகோமா நோய் இல்​லாத நாடாக இந்​தியா உரு​வெடுத்துள்ளது. இது லட்​சக்​கணக்​கான சுகா​தார பணி​யாளர்​களின் உழைப்​புக்கு கிடைத்த வெற்றி ஆகும். அனைத்து ஊரக பகுதி வீடு​களுக்​கும் ஜல் ஜீவன் திட்​டத்​தின் கீழ் சுத்​த​மான குடிநீர் வழங்​கப்​படு​கிறது.

    இதனால் ட்ராகோமா உட்பட பாக்​டீரி​யா​வால் பரவும் நோய்​களின் அபா​யம் குறைந்துவரு​கிறது. இந்​தி​யா​வில் நோய்​களுக்​கான அடிப்​படை காரணி​கள் கண்​டறியப்​பட்​டு, அந்த நோய்​கள் அறவே ஒழிக்​கப்​பட்டு வரு​கின்றன என்று உலக சுகா​தார அமைப்பே புகழாரம் சூட்டி உள்​ளது.

    சர்​வ​தேச தொழிலா​ளர் அமைப்பு சமீபத்தில் ஓர் அறிக்​கையை வெளி​யிட்​டது. இதில், இந்​தியா முழு​வதும் 64 சதவீதத்​துக்​கும் அதி​க​மான மக்​களுக்கு சமூக பாது​காப்பு ஆதா​யம் கிடைத்து வரு​வ​தாக குறிப்​பிடப்​பட்டு உள்​ளது. அதாவது, சுமார் 95 கோடிக்​கும் மேற்​பட்ட மக்​கள் அரசு நலத் ​திட்​டங்​களால் பயனடைந்து வரு​கின்​றனர். கடந்த 2015-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 25 கோடிக்​கும் குறை​வாகவே இருந்​தது.

    அவசரநிலை ஓர் இருண்ட காலம்: கடந்த 1975-ம் ஆண்​டில் நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டது. இந்த அவசர நிலையை அமல் செய்​தவர்​கள், நமது அரசி​யலமைப்பு சட்​டத்தை படு​கொலை செய்​தனர். அதோடு நீதி​மன்​றங்​களை தங்​களின் அடிமை​களாக மாற்ற முயற்சி செய்​தனர். ஜார்ஜ் பெர்​னாண்​டஸ் உள்​ளிட்ட தலைவர்கள் கொடூர​மான சித்​ர​வதைகளுக்கு ஆளாகினர். அவசர நிலை காலத்​தில் மிசா சட்​டத்​தின்​படி யாரை வேண்​டு​மா​னாலும் கைது செய்ய முடி​யும் என்ற நிலை இருந்தது. மக்​களின் கருத்து சுதந்​திரம் பறிக்​கப்​பட்​டது.

    அவசர நிலையை எதிர்த்து ஆயிரக்​கணக்​கான மக்​கள் போராடினர். அவர்​கள் காட்​டுமி​ராண்​டித்​தன​மாக தாக்​கப்​பட்​டனர். அது ஓர் இருண்ட காலம். ஆனால், அடக்​கு​முறைக்கு மக்​கள் பணி​ய​வில்​லை. அதை எதிர்த்து போராடி மாபெரும் வெற்றி பெற்​றனர். அவசர நிலை திணிக்​கப்​பட்டு 50 ஆண்​டு​கள் நிறைவடைந்​திருக்​கிறது. இதை நினை​வு​ கூரும் வகை​யில் கடந்த 25-ம் தேதி அரசி​யலமைப்​பு படு​கொலை தினத்தை கடை​பிடித்​தோம்.

    உடல் உறு​தி,ஆரோக்​கிய வாழ்​வில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்​டும். இதற்கு உடல் பரு​மனை குறைக்க வேண்​டும். அன்​றாட உணவில் 10 சதவீதம் வரை எண்​ணெய்யை குறைத்​தால் உடல் பரு​மன் பிரச்​சினைக்கு தீர்வு காண முடி​யும். ஜூன் 5-ம் தேதி உலக சுற்​றுச்​சூழல் தினத்தை கொண்​டாடினோம். இந்​தி​யா​வின் சுற்​றுச்​சூழலை பாது​காக்க தனி​நபர்​கள் முதல் பல்​வேறு குழுக்​கள் அதிதீ​விர​மாக பணி​யாற்றி வரு​கின்​றன.

    சுற்​றுச்​சூழலை பாது​காக்க அம்​மா​வின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்​கம் நாடு முழு​வதும் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதன்​படி, நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மரங்​கள் நடப்​பட்டுள்​ளன. உங்​கள் கிராமங்​கள், நகரங்​களில் அதிக அளவில் மரங்​களை நட வேண்​டு​கிறேன். இதன்​மூலம் நமது வருங்​கால தலை​முறை​யினரை பாது​காக்க முடி​யும்.

    இப்​போது அனை​வரின் பார்​வை​யும் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தின் மீது நிலைபெற்​றிருக்​கிறது. நமது குரூப் கேப்​டன் ஷுபன்ஷு சுக்லா, விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருக்​கிறார். அவரோடு நான் கலந்​துரை​யாடினேன். எங்​கள் உரை​யாடலை நீங்​களும் கேட்​டிருப்​பீர்​கள். அடுத்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ஷுபன்ஷு சுக்​லா​வின் விண்​வெளி பயணம் குறித்து விரி​வாக பேசுவேன்.

    ஜூலை 1-ம் தேதி மருத்​து​வர்​கள், ஆடிட்​டர்​கள் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இரு பிரி​வினரும் நமது சமூகத்​தின் மிகப்​பெரிய தூண்​கள். மருத்​து​வர்​கள் நமது உடல் ஆரோக்​கி​யத்​தின் பாது​காவலர்​கள். ஆடிட்​டர்​கள் நமது பொருளா​தா​ரத்​தின் வழி​காட்​டிகள். அவர்களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்​. இவ்​வாறு பிரதமர்​ பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது

    September 11, 2025
    தேசியம்

    நேபாள வன்முறையால் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் திபெத்தில் தவிப்பு

    September 11, 2025
    தேசியம்

    குடியுரிமைக்கு முன் வாக்காளர் அட்டை பெற்ற சோனியா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    September 11, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்

    September 11, 2025
    தேசியம்

    அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

    September 10, 2025
    தேசியம்

    ‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது
    • யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!
    • நெகட்டிவ் கதாபாத்திரம்: நடிகர் சர்வா ஆசை!
    • 37 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக கூறுவது பொய்: பழனிசாமி குற்றச்சாட்டு
    • நேபாள வன்முறையால் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் திபெத்தில் தவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.