Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 29 Jun, 2025 12:27 PM

    Published : 29 Jun 2025 12:27 PM
    Last Updated : 29 Jun 2025 12:27 PM

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு
    புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவரை மீட்டுச் செல்லும் காட்சி.

    புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் குவிவதுண்டு. வழக்கம்போல் இந்த ஆண்டும் ரத யாத்திரைக்காக புரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்நிலையில், புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இது குறித்து புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் எஸ் ஸ்வெயின் கூறுகையில், “ரத யாத்திரையை ஒட்டி அதிகாலை 4 முதல் 4.30 மணிக்குள் ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே, கூட்டம் குவிந்தது. எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டதால் நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ப்ரவிதா தாஸ் (52), பிரேம் கந்தா (52), பசந்தி சாஹு (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கூட்ட மேலாண்மையில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.” என்றார்.

    மன்னிப்பு கோரிய முதல்வர்: இந்த விபத்து குறித்து ஒடிசா முதல்வர் சரண் மாஞ்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பக்தர்கள் மத்தியில் மஹாபிரபுவையும், சாரதாபாலியையும் காண வேண்டி ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், துரதிர்ஷ்டவசமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்காக நானும், எனது அரசாங்கமும் ஜெகநாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நேபாள வன்முறையால் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் திபெத்தில் தவிப்பு

    September 11, 2025
    தேசியம்

    குடியுரிமைக்கு முன் வாக்காளர் அட்டை பெற்ற சோனியா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    September 11, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்

    September 11, 2025
    தேசியம்

    அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

    September 10, 2025
    தேசியம்

    ‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

    September 10, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 12 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!
    • நெகட்டிவ் கதாபாத்திரம்: நடிகர் சர்வா ஆசை!
    • 37 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக கூறுவது பொய்: பழனிசாமி குற்றச்சாட்டு
    • நேபாள வன்முறையால் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் திபெத்தில் தவிப்பு
    • தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி: கால் இறுதியில் சத்தியன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.