Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இந்த இரு போர்களின்போது கிடைத்த அனுபவங்கள் காரணமாக கடந்த 1968-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு இந்தியாவின் உயர் உளவு பிரிவு ஆகும்.

    ரா அமைப்பின் முதல் தலைவராக கே.என்.ராவ் பணியாற்றினார். 1968-ம் ஆண்டு முதல் 1977 வரை அவர் பதவியில் நீடித்தார். இதன்பிறகு பலரும் ரா அமைப்பின் தலைவராக பதவி வகித்துள்ளனர். பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகள், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் ரா தலைவர்களாக பதவியேற்பது வழக்கம்.

    கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர், கடந்த 1975-ம் ஆண்டில் இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்டது, காலிஸ்தான் தீவிரவாத பிரச்சினை, பாலகோட் துல்லிய தாக்குதல் உட்பட பல்வேறு காலக்கட்டங்களில் ரா மிக முக்கிய பங்காற்றி உள்ளது.

    ரா அமைப்பின் தற்போதைய தலைவர் ரவி சின்ஹா நாளை ஓய்வு பெறுவதால் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் மாநில ஐபிஎஸ் அதிகாரியான இவர் மிக நீண்ட காலமாக ரா அமைப்பில் பணியாற்றி வருகிறார். தற்போது ரா -வின் வான்பரப்பு ஆய்வு மையத்தின் தலைவராக உள்ளார்.

    கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த முகாம்களை அடையாளம் கண்டு, அவற்றை அழித்ததில் பராக் ஜெயின் முக்கிய பங்கு வகித்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது காஷ்மீர் விவகாரத்தை பராக் ஜெயின் கையாண்டார். காஷ்மீரில் வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இந்த துல்லிய தாக்குதலின்போதும் பராக் ஜெயின் மிக முக்கிய பங்கு வகித்தார். ஜூலை 1-ம் தேதி ரா அமைப்பின் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார். இரண்டு ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ – மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

    December 1, 2025
    தேசியம்

    சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

    December 1, 2025
    தேசியம்

    பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

    December 1, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

    December 1, 2025
    தேசியம்

    பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

    December 1, 2025
    தேசியம்

    பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமந்தா ரூத் பிரபுவின் மயோசிடிஸ் பயணம்: ஆட்டோ இம்யூன் நிலை மற்றும் நடிகர் வலியை உண்மையான வலிமையாக மாற்றியது பற்றி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கனவுகளுடன் அமெரிக்காவிற்கு வந்தார்’: ப்ரீத் ஹர்சோடாவின் நண்பர்கள் சிகிச்சைக்காக உதவியை நாடுகின்றனர், 30 இந்திய மாணவர்கள் FSU தீயில் பாதிக்கப்பட்டுள்ளனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ – மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
    • புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
    • அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.