Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்
    தேசியம்

    பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

    இந்நிலையில், வித்யானந்தின் நூற்றாண்டு (பிறந்த நாள்) விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சார அமைச்சகமும் பகவான் மகாவீரர் அகிம்சா பாரதி அறக்கட்டளையும் இணைந்து செய்துள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் கல்வி, கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தர்ம சக்கரவர்த்தி பட்டத்தை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: இன்று இந்தியாவின் ஆன்மிக மரபில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை நாம் அனைவரும் காண்கிறோம். ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜின் நூற்றாண்டு விழா அவருடைய எண்ணற்ற சீடர்களின் பக்தியால் நிரம்பி உள்ளது. இது நம் அனைவருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

    இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கிறீர்கள். இதற்கு தகுதியானவன் என்று நான் கருதவில்லை. ஆனால், துறவிகளிடமிருந்து எதைப் பெற்றாலும் அதை பிரசாதமாக ஏற்றுக் கொள்வது நமது கலாச்சாரம். எனவே, நான் இந்த பிரசாதத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டு அதை பாரத மாதாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ‘ஆச்சார்யா ஸ்ரீ 108-வது வித்யானந்த்ஜி மஹராஜின் வாழ்க்கை மற்றும் மரபு’ என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதில் அவரின் பங்களிப்புகளை விவரிக்கும் சுவரோவியங்கள், ஓவியங்கள் மற்றும் அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் ராஷ்ட்ரசன்ட் பரம்பராச்சார்யா பிரக்யாசாகர் முனிராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெயின் துறவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு

    June 29, 2025
    தேசியம்

    ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

    June 29, 2025
    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜப்பானின் நீண்ட ஆயுள் என்று அழைக்கப்படும் ஓகிமியிடமிருந்து கற்றுக்கொள்ள வாழ்க்கை மாறும் பாடங்கள்
    • ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்
    • ஸ்க்விட் கேம் சீசன் 3 முடிவடைந்ததால் நெட்ஃபிக்ஸ் அறைந்தது, கேட் பிளான்செட் டிடாக்ஜியை ஸ்க்விட் கேம் யுஎஸ்ஏ டீஸரில் விளையாடுகிறார்: ‘அமெரிக்காவில் கொரிய விளையாட்டு?’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.