Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»”மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல” – சிவராஜ் சிங் சவுகான்
    தேசியம்

    ”மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல” – சிவராஜ் சிங் சவுகான்

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல” – சிவராஜ் சிங் சவுகான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாரணாசி: இந்தியாவுக்கு சோசலிசம் தேவையில்லை, மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

    அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்தியாவில் சோசலிசம் தேவையில்லை. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரத்தின் மையக்கரு அல்ல. எனவே, இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

    தனது அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார். அப்போது எல்லைகளில் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, உள்நாட்டு பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. பிரதமர் பதவிக்கு மட்டுமே அச்சுறுத்தல் இருந்தது. எனவே, ஜூன் 25, 1975 அன்று இரவு, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமலேயே நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

    அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது எனக்கு 16 வயதுதான். அப்போதே நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இன்றும் கூட, அந்த இருண்ட நாட்களை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு நெஞ்சு வலிக்கிறது. அவசரநிலையின் போது, ​​துர்க்மேன் கேட்டில் வீடுகளை இடிக்கும்போது எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் புல்டோசர்களால் நசுக்கப்பட்டனர். யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் மீது குண்டுகள் பாய்ந்தன. அது பொதுமக்கள் மீது சுடப்பட்ட தோட்டாக்கள் அல்ல, அது அரசியலமைப்பின் படுகொலை.

    அப்போது அனைத்து சிவில் உரிமைகளும் முடக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரத்துக்கு பூட்டு போடப்பட்டது. முழு நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றினர். அனைத்து எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் கூட சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இருண்ட நாட்கள் இன்னும் நினைவில் உள்ளன. சர்வாதிகாரம் காங்கிரஸின் டிஎன்ஏவில் உள்ளது. இப்போது அரசியலமைப்பின் நகலை கையில் ஏந்தியவர் ( ராகுல் காந்தி) இதற்கு பதிலளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் ஜனநாயகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அது பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் தான் செய்த இந்த வரலாற்றுத் தவறுக்கான நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” என்றார்

    முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அரசியலமைப்பின் முகவுரையில் ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்தது. அவசரநிலையின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் புதுடெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, “அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் முகவுரையில் இந்த வார்த்தைகள் ஒருபோதும் இல்லை. அவசரநிலையின் போது, ​​அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது, ​​நாடாளுமன்றம் செயல்படவில்லை, நீதித்துறை முடமாகிவிட்டது. அதன்பின்னர் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன” என்றார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சிவராஜ் சிங் சவுகான் தற்போது இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

    .



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    தேசியம்

    சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

    June 28, 2025
    தேசியம்

    “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 28, 2025
    தேசியம்

    “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

    June 28, 2025
    தேசியம்

    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

    June 28, 2025
    தேசியம்

    ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்
    • இந்திய அளவில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்த ‘கண்ணப்பா’
    • விபத்தில்லா நிலையை உருவாக்க வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.