Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துக் கொண்டு நொய்டாவில் முதியோர்களை கவனிக்காத ஆசிரமம்
    தேசியம்

    லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துக் கொண்டு நொய்டாவில் முதியோர்களை கவனிக்காத ஆசிரமம்

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துக் கொண்டு நொய்டாவில் முதியோர்களை கவனிக்காத ஆசிரமம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: லட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் ஆயிரக்கணக்கில் மாத பாராமரிப்புத் தொகையை பெற்றுக்கொண்டு முதியோர்களை கவனிக்காத ஆசிரமத்தில் இருந்து 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    உத்த பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 55-ல் உள்ளது ஆனந்த் நிகேதன் விரிதா ஆசிரமம். இங்கு வயதானவர்கள் தங்குவதற்காக முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அண்மையில் இந்த ஆசிரமம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

    அதில், முதியோர்கள் அவர்களில் அறைகளில் வைத்து பூட்டப்பட்டும், அவர்களது கைகள் கட்டப்பட்டும், ஆடைகள் இன்றி இருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து, மாநில மகளிர் ஆணையம் மற்றும் நொய்டா காவல் துறை துரிதமாக செயல்பட்டு அந்த ஆசிரமத்தில் கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தியது. இதில், முதியோர்கள் முறையான பராமரிப்பின்றி தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 39 முதியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

    இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்ஷி பரலா கூறுகையில், “ தரைதளத்தில் தங்கியிருந்த அறைகள் பூட்டப்பட்டிருந்தன. அவர்களின் உடைகளில் இருந்து சிறுநீர் கழிக்கப்பட்ட துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான முதியவர்கள் ஆடைகளின்றி காணப்பட்டனர்.

    39 முதியவர்களை கவனித்துக் கொள்ள ஒரேயொரு உதவியாளர் மட்டுமே உள்ளார். அவரும் தற்போதுதான் 12-ம் வகுப்பு படித்துவிட்டு பணியில் சேர்ந்துள்ளார்.

    முதல் கட்ட விசாரணையில் அந்த ஆசிரமம் முதியவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சத்தை நன்கொடையாக பெற்றுக்கொண்டதுடன், மாத பராமரிப்பு கட்டணமாக ரூ.6,000-ம் பெற்று வந்துள்ளனர். ஆனால், முதியோர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை. இதுதொடர்பாக, ஆசிரமத்தின் நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    தேசியம்

    சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

    June 28, 2025
    தேசியம்

    “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 28, 2025
    தேசியம்

    “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

    June 28, 2025
    தேசியம்

    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

    June 28, 2025
    தேசியம்

    ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”ஜூலை 1 முதல் 3.16% கட்டணம் உயர்த்த மின்வாரியம்  முடிவு” – அன்புமணி குற்றச்சாட்டு
    • 5 ஸ்டைல் ​​பாடங்கள் சோஹ்ரான் மம்தானியிடமிருந்து நாம் முற்றிலும் திருடலாம் – இந்தியாவின் டைம்ஸ்
    • திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் – திமுக அரசை கண்டித்து ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    • வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க முடியுமா? டாக்டர் வினைபுரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.