Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
    மாநிலம்

    பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.

    இதற்காக 2024-25-ம் கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுப் பேருந்துகளில் புத்தகப்பை, உணவுப் பைகளுடன் செல்லும்போது, கூட்ட நெருக்கடியில் சிக்கி சிரமப்படுகின்றனர்.

    இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும்போது சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    எனவே, அரசுப் பேருந்துகளில் இலவச பாஸை பயன்படுத்தி பயணிக்கும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகளுக்காக மட்டும் தனி பேருந்துகள் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்து, “பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதில் பெற்றோருக்கு அதிக கடமை உள்ளது. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் புகை, மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு உள்ளாகி வருவது அதிகமாக உள்ளது. மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும் அளவில் நிலைமை உள்ளது.

    பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓட்டுநர், நடத்துனர் அறிவுறுத்தினாலும், மாணவர்கள் அதை ஏற்காமல் சாகசம் என்று கருதி, படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    படிக்கட்டில் பயணிப்பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யலாம். எனவே, பயணத்தின்போது மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதையும் மீறி சாகசத்துக்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “எந்த நம்பிக்கையில் ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?” – தமிழிசை

    August 26, 2025
    மாநிலம்

    மதுரை மேயரை மாற்றும் விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் திமுக!

    August 26, 2025
    மாநிலம்

    “தோல்வியால் துவண்டு விடக் கூடாது!” – அண்ணாமலை அறிவுரை

    August 26, 2025
    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளையொட்டி 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    August 26, 2025
    மாநிலம்

    ‘மகிழ்ச்சி’ கருப்பொருளில் மாணவி தாரிகாவின் கலைப் படைப்புகள் கண்காட்சி: சென்னையில் ஆக. 30-ல் தொடக்கம்

    August 26, 2025
    மாநிலம்

    அக். 27-ல் இந்திய கடல்சார் உச்சி மாநாடு: மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் தகவல்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியா – பாக் மோதலின்போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு
    • “எந்த நம்பிக்கையில் ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?” – தமிழிசை
    • நாட்டுப் பாடகர் கார்லி பியர்ஸ் தனது மனநலப் போராட்டங்களைப் பற்றி திறக்கிறார்: பதட்டம், ஒ.சி.டி மற்றும் குணப்படுத்துவதற்கான அவரது பயணம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏலியன் ஸ்பேஸ்ஷிப் அல்லது வால்மீன்? நாசா சூரிய குடும்பம் வழியாக மர்மமான பொருள் பந்தயத்தைப் பற்றிய புதுப்பிப்பைப் பகிர்ந்து கொள்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர் மோடி படிப்புச் சான்றிதழ் விவகாரம்: மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.