Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளேன். நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளேன். கட்டுமானத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் அரசுத் துறைகளில் முறையாக டெண்டர் எடுத்து, அரசு திட்டங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு 2025- 2026 ஆண்டுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை வெளியிடப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட்டால் மட்டுமே, அந்த விலைப் பட்டியல் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி தயாரிக்க முடியும்.

    2024-2025 ஆண்டு விலை நிர்ணய தொகையின் அடிப்படையில் தற்போது ஏலம் நடத்தப்படுகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட சிமென்ட், ஜல்லி, மணல் விலை தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டிடத் தொழிலாளர்களின் சம்பளமும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், அரசு இந்த ஆண்டுக்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடாமல் இருப்பது சரியல்ல.

    இது தொடர்பாக தமிழக நிதித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு ஒப்பந்ததாரர்களுக்கான இந்த ஆண்டு கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து, “ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் விலை நிர்ணய பட்டியலை இன்னும் ஏன் வெளியிடவில்லை? இவ்வாறு இருந்தால் ஒப்பந்ததாரர் எவ்வாறு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கேட்க முடியும்? விலைவாசி உயர்ந்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் பிளாட்டின் பால்கனியில் சூரியகாந்தி வளர்க்க முடியுமா? இதோ அவற்றை பூக்க வைப்பது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • யார் இந்த ஜக்பிரீத் சிங்? கனடாவில் விசாரணையில் உள்ள இந்திய வம்சாவளி ஆண் மனைவி ‘ரத்தத்தில்’ எட்டு முறை கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டுபிடித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாழும் சுவர்கள் மற்றும் செங்குத்து தோட்டங்கள்: உண்மையான வேறுபாடு என்ன, எது சிறந்தது, ஏன்? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் எனது பிறந்தநாளை நான் கொண்டாடவே இல்லை: இந்த சிறப்பு நாள் ஏன் எப்போதும் தனக்கான ஈர்ப்பை இழந்துவிட்டது என்று அமெரிக்கப் பெண் பகிர்ந்துகொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஸியான மனைவியுடன் திருமணத்தை எப்படி நடத்துவது, உளவியலாளர் வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.