Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார்
    தேசியம்

    ‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார்

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மராத்தி மட்​டுமே கட்​டாய மொழி என அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரிவித்தார்.

    இருப்பினும் அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற விவகாரம் அங்கு அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார் அணி) தலைவருமான சரத் பவார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    “தொடக்கப்பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இதுவே எனது கருத்து. 5-ம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இந்தி மொழி கற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், நாட்டில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசுகிறார்கள். அதனால் அந்த மொழியை நாம் முற்றிலுமாக புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை.

    ஒரு குறிப்பிட்ட வயது வரை மாணவர்கள் மீது மொழிகள் கற்பது சார்ந்து எந்த திணிப்பும் கூடாது. ஒரே நேரத்தில் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களால் எத்தனை மொழி கற்க முடியும் என முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிகளை மாணவர்கள் கற்கும் போது, அந்த சுமை காரணமாக தாய்மொழி புறக்கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    அதனால் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மாநில அரசு கைவிட வேண்டும். தாய்மொழி முதன்மையானதாக இருக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு பின்னர் வேறு மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினால், சம்பந்தப்பட்ட மாணவரும், அவரது குடும்பத்தினரும் அது குறித்த முடிவை எடுக்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

    September 10, 2025
    தேசியம்

    ‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

    September 10, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 12 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

    September 10, 2025
    தேசியம்

    சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு

    September 10, 2025
    தேசியம்

    குடியரசுத் துணைத் தலைவரின் ஊதியம் எவ்வளவு?

    September 10, 2025
    தேசியம்

    “வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!
    • உத்தரகண்ட் பஹாதி ராஸ்: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான இமயமலை டிஷ் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் பணக்காரர் லாரி எலிசனின் ஐந்தாவது மனைவி அவரை விட 47 வயது இளையவர்: அவரது ஆரம்பகால திருமணங்கள் மற்றும் சிறிய அறியப்படாத கூட்டாண்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாழை தலாம் மற்றும் வினிகரை கலப்பது தோட்டக்கலை, சுத்தம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி அமீரகத்தை எளிதில் வென்ற இந்தியா | ஆசிய கோப்பை கிரிக்கெட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.