Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்கும் பணி தீவிரம்: மத்திய அரசு
    தேசியம்

    ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்கும் பணி தீவிரம்: மத்திய அரசு

    adminBy adminJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்கும் பணி தீவிரம்: மத்திய அரசு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா விமானம் AI-171 துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) உடனடி விசாரணைக்காக, ஜூன் 13, 2025 அன்று பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பலதுறை குழு அமைக்கப்பட்டது.

    சர்வதேச நெறிமுறையின்படி அமைக்கப்பட்ட இந்தக் குழு, விமானப் போக்குவரத்து மருத்துவ நிபுணர், ஒரு ATC அதிகாரி, அமெரிக்க அரசின் புலனாய்வு நிறுவனமான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் [NTSB] ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.

    AAIB இயக்குநர் ஜெனரல் G.V.G. யுகந்தர் தலைமையிலான குழு, NTSB இன் தொழில்நுட்ப உறுப்பினர்களுடன் இணைந்து தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறையை ஜூன் 24 மாலை தொடங்கின. கருப்புப் பெட்டியிலிருந்து விபத்து பாதுகாப்பு தொகுதி [CPM] பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 25, அன்று memory module வெற்றிகரமாக அணுகப்பட்டு அதன் தரவு AAIB ஆய்வகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. CVR [Cockpit Voice Recorder] மற்றும் FDR [Flight Data Recorder] தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது.

    இந்த தரவு பகுப்பாய்வு, விபத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளின் வரிசையை வெளிப்படுத்தும். இதன்மூலம், விமான விபத்துக்கான காரணங்களைக் கண்டறிவதோடு, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுப்பதற்கும் தேவையான தரவுகளை வழங்கும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் ஜூன் 12 அன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

    August 27, 2025
    தேசியம்

    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

    August 27, 2025
    தேசியம்

    “50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

    August 26, 2025
    தேசியம்

    ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

    August 26, 2025
    தேசியம்

    கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

    August 26, 2025
    தேசியம்

    பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியா – பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
    • உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
    • 9 வழிகள் உங்கள் வியர்வை உங்கள் உடலுக்குள் மறைக்கப்பட்ட உடல்நல அபாயங்கள் மற்றும் சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் – முழு விவரம்
    • அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு சுதந்திரமான வர்த்தகத்துக்கு தடையாக இருக்கும்: ஜெர்மனி துணைத் தூதர் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.