Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்: உளவு பார்த்த வழக்கில் சிறையில் இருப்பவரின் பின்னணி
    தேசியம்

    பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்: உளவு பார்த்த வழக்கில் சிறையில் இருப்பவரின் பின்னணி

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்: உளவு பார்த்த வழக்கில் சிறையில் இருப்பவரின் பின்னணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உலகின் மிகச் சிறந்த போர் விமான​மாக அமெரிக்​கா​வின் பி-2 விமானம் கருதப்​படு​கிறது. மொத்​தம் 172 அடி அகலம், 69 அடி நீள​முடைய இந்த விமானத்தை ரேடாரில் கண்​டறிய முடி​யாது. அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்​டது. தொடர்ந்து 11,000 கி.மீ. வரை தரை​யிறங்​காமல் பறக்​கும். இந்த பி-2 ரகபோர் விமானங்​கள் வேறு எந்த நாட்​டிட​மும் இல்​லை, அந்​தளவுக்கு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பி-2 ரக விமான வடிவ​மைப்​பில் இந்​தி​யர் ஒரு​வர் உதவி செய்​து, பின்​னர் உளவு பார்த்த வழக்​கில் சிறை தண்​டனை பெற்​றுள்​ளார். ஈரான் மீது பி-2 விமானம் தாக்​குதல் நடத்​திய நிலை​யில், தற்​போது அவருடைய தகவல்​கள் மீண்​டும் வலம் வந்​துள்​ளன.

    அதன் விவரம் வரு​மாறு:கடந்த 1944-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 11-ம் தேதி மும்​பை​யில் பிறந்​தவர் நோஷிர் ஷெரி​யார்ஜி கவுடி​யா. பார்சி குடும்​பத்​தில் பிறந்த கவுடியா சிறு வயதிலேயே மிக​வும் புத்​தி​சாலி​யாக இருந்​தார். தனது 15-வது வயதிலேயே பிஎச்​.டி பட்​டத்​துக்கு நிக​ரான பட்​டம் பெற்​றுள்​ளார். அதன்​பிறகு 19-வது வயதில் ஏரோ​நாட்​டிக்​கல் இன்​ஜினீயரிங் படிப்​ப​தற்​காக அமெரிக்கா​வுக்கு சென்​றுள்​ளார்.

    பின்​னர் வெர்​ஜினி​யா​வில் உள்ள நார்த்​ராப் என்ற நிறு​வனத்​தில் பணி​யில் சேர்ந்​தார். இந்த நிறு​வனம் விண்​வெளி கருவி​கள் மற்​றும் ஆயுதங்​களை உற்​பத்தி செய்து வந்​தது. அங்​கு​தான் பி-2 விமான வடிவ​மைப்​பில் கவுடியா ஈடு​பட்​டுள்​ளார். குறிப்​பாக பி-2 விமானத்​தின் உந்து சக்தி பிரிவுக்கு உதவியுள்ளார்.

    பின்​னர் நார்த்​ராப் நிறு​வனத்​தில் இருந்து விலகி சொந்​த​மாக பாது​காப்​புத் ஆலோ​சனை நிறு​வனத்தை தொடங்கி உள்​ளார். அவர் லாஸ் அலமோஸில் அமெரிக்க உளவு நிறு​வனம் சிஐஏ விமானங்​கள் மற்​றும் அணு ஆயுதங்​கள் குறித்து ஆலோ​சனை வழங்கினார்.

    மேலும் 1999-ம் ஆண்​டு, என்​.எஸ் கவுடியா என்ற பெயரில் நிறு​வனத்​தைத் தொடங்​கி​னார். நிறு​வனத்​தின் திட்​டங்​களை செயல்​படுத்த நிறைய பணம் தேவைப்​பட்​ட​தால், வெளி​நாடு​களில் இருந்து வாடிக்​கை​யாளர்​களை தேடி​னார். அப்​போது​தான் அவர் சீனா​வுடன் தொடர்பை ஏற்​படுத்​தி​னார்.

    மூன்று முறை சீனா​வுக்கு சென்று வந்த கவுடி​யா, பி-2 விமானத்​துக்​குப் பயன்​படுத்​தும் உந்து சக்தி பற்​றிய தகவல்​களை வழங்கி உள்​ளார். அந்த தகவல்​களை வைத்து ரேடாரில் சிக்​காத போர் விமான தயாரிப்​பில் சீனா ஈடு​பட்​டது. அப்​போது கவுடி​யா​வுக்கு ஒரு லட்​சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரை சீனா வழங்​கிய​தாக கூறப்​படு​கிறது.

    அடுத்த சில ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் பி-2 விமானத்தை போலவே சீன விமான தளங்​களில் போர் விமானம் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​ததை செயற்​கைக் கோள்​கள் புகைப்​படம் எடுத்து காட்​டின. இது பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. அதன்​பின் உஷா​ரான அமெரிக்க புல​னாய்வு அமைப்பு எப்​பிஐ, ஹவா​யில் தங்​கி​யிருந்த கவுடி​யாவை கடந்த 2005-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் 26-ம் தேதி கைது செய்​தது.

    அவர் மீது தேசிய பாது​காப்பு ரகசி​யங்​களை வெளி​நாடு​களுக்கு விற்​றது, ஆயுதங்​கள் ஏற்​றுமதி கட்​டுப்​பாடு சட்​டத்தை மீறியது, உளவு பார்த்​தது போன்ற 14 குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டன. இந்த வழக்​கு​களில் கவுடி​யா​வுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 32 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. தற்​போது அவர் அமெரிக்​கா​வின் கொல​ராடோ​வின் பிளாரன்ஸ் சிறை​யில் தண்​டனை அனுப​வித்து வரு​கிறார். அவருக்கு வயது 81 ஆகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

    June 29, 2025
    தேசியம்

    மேற்கு வங்க மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு; 4 பேர் கைது

    June 29, 2025
    தேசியம்

    புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்: விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு

    June 29, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்: பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

    June 29, 2025
    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு
    • விஞ்ஞானத்தின் ஆதரவுடன், இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தக்கூடிய 5 சிறிய பழக்கவழக்கங்கள்
    • தேர்தல் பிரச்சாரத்துக்கு 68,000 டிஜிட்டல் நிர்வாகிகள்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்
    • தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை பெய்ய வாய்ப்பு
    • முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: நீர்வரத்து 80,984 கனஅடியாக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.