Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இடிந்து விழுந்து 3 மாதங்கள்… பாரதி இல்லத்தை புதுப்பிப்பது எப்போது?
    மாநிலம்

    இடிந்து விழுந்து 3 மாதங்கள்… பாரதி இல்லத்தை புதுப்பிப்பது எப்போது?

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இடிந்து விழுந்து 3 மாதங்கள்… பாரதி இல்லத்தை புதுப்பிப்பது எப்போது?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் இடிந்து 3 மாதங்களாகியும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளது. எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இக்கட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, பாரதியார் பிறந்த இல்லத்தை அரசு சார்பில் விலைக்கு வாங்கி, அதனை நினைவில்லமாக அறிவித்து திறந்துவைத்தார். இந்த இல்லத்தை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 6 மணி வரையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வந்தனர்.

    இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வந்தது. பார்வையாளர்கள் அதிகமாக வருவது வழக்கம். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதன கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.

    இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி மாலை பாரதியார் இல்லத்தின் வரவேற்பாளர் பகுதி மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்தது. வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்டவை சேதமடைந்தன.

    இதையடுத்து பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த இல்லம் ரூ.1 கோடி செலவில் பழமை மாறாமல் புராதன முறையில் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாரதியார் இல்லம் இடிந்து சுமார் 3 மாதங்களாகியும், இதுவரை எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை.

    சேதமடைந்த அடுத்த நாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து மேற்கூரையை முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு வீட்டின் முகப்பில் சவுக்கு கம்புகள் கட்டி தடுப்புகள் ஏற்படுத்தி, அதில் வலைகளை பொருத்தி விட்டு சென்றனர். அதன்பின் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    எட்டயபுரத்தில் பாரதியார் இல்லம் இடிந்து விழுந்ததால்,

    அதன் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டு, திரைச்சீலைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

    பாரதியார் இல்லத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பாரதியார் இல்லத்தை புதுப்பிக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பாரதி அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாணை வெளியீடு, ஒப்பந்த அறிவிப்பு என துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 11-ம் தேதி பாரதி நினைவு தினம் வருகிறது. அதற்கு முன்பு பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க வேண்டும் எனவும் பாரதி அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

    June 30, 2025
    மாநிலம்

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகள் அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

    June 30, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

    June 30, 2025
    மாநிலம்

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்

    June 30, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு: தமிழக அரசு பெருமிதம்

    June 30, 2025
    மாநிலம்

    டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பது ஏன்? – டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இன்று முதல் மாநில சீனியர் வாலிபால்!
    • ‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ – அவசரக் கல்யாணம்
    • வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்
    • மகிழ்ச்சியான வீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் 7 சொல்லப்படாத குடும்ப விதிகள்
    • கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.