Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காங்கிரஸில் ஜனநாயக விரோத மனநிலை: எமர்ஜென்சி குறித்து அமித் ஷா குற்றச்சாட்டு
    தேசியம்

    காங்கிரஸில் ஜனநாயக விரோத மனநிலை: எமர்ஜென்சி குறித்து அமித் ஷா குற்றச்சாட்டு

    adminBy adminJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காங்கிரஸில் ஜனநாயக விரோத மனநிலை: எமர்ஜென்சி குறித்து அமித் ஷா குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவசர நிலையை அப்போது பிரகடனப்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

    ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி. அந்த ஒருவரால்தான் (மறைமுகமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை குறிப்பிட்டார்) எமர்ஜென்சி நாட்டில் அமல்படுத்தப்பட்டது.

    அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்துக்கு செய்த துரோகம்தான் இந்த அவசர நிலை பிரகடனம். அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும்போது, அதை தூக்கி எறியும் அதிகாரம் மக்களுக்கு உண்டு என்பதை இந்த நாள் நமக்குச் சொல்கிறது.

    அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.

    இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவசரநிலை பிரகடனத்தின்போது மக்கள் கொதித்தெழுந்தனர். சர்வாதிகாரமிக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவர்கள் போராடினர். தலைமையிலிருந்து வெளியேறு என்று கோஷம் எழுப்பினர். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி தியாகம் செய்த அனைத்து ஹீரோக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா அதில் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    August 27, 2025
    தேசியம்

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

    August 27, 2025
    தேசியம்

    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

    August 27, 2025
    தேசியம்

    “50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

    August 26, 2025
    தேசியம்

    ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

    August 26, 2025
    தேசியம்

    கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர் இரத்த சர்க்கரை கூர்முனைகளை ஏற்படுத்தும் முதல் 5 பழங்கள்
    • தேங்காய் நீர் நன்மைகள்: தேங்காய் நீர் குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு ‘சூப்பர் பானம்’? சிறந்த அமெரிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் மறைக்கப்பட்ட ஆபத்து: மிகவும் கண்டிப்பான உணவு அட்டவணைகளுக்கு எதிராக நிபுணர் எச்சரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐ.சி.எம்.ஆர் ஆய்வு இந்திய பெண்களிடையே முதல் இரண்டு புற்றுநோய்களை வெளிப்படுத்துகிறது; முன்கூட்டியே கண்டறிதல் இறப்புகளைத் தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டீன் புற்றுநோய் எச்சரிக்கை: 19 வயதான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி மறைக்கப்பட்ட கட்டி வெளிப்படுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.