Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்
    தேசியம்

    கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்

    adminBy adminJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: மாம்பழ விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வு காணக் கோரி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் மாம்பழ சாகுபடி அதிகம் நடக்கிறது. பாரம்பரிய மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தபோது டன் ஒன்றுக்கு ரூ.18,000 அளவுக்கு கூடுதல் விலை பெற்றனர். ஆனால், தற்போது மிகக் குறைந்த மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4,000 மட்டுமே கிடைக்கிறது.

    உற்பத்திச் செலவு முந்தைய ஆண்டை விட அதிகம் இருப்பதால், விவசாயிகள் பழங்களை மரத்திலேயே விட்டுவிட்டு, சாலைகளில் வீசி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது விவசாயிகள் அரசின் ஆதரவைக் கோரி வருகின்றனர். இந்நிலையில்,

    பிரதமர் அன்னதாதா ஆய் சம்ரக்ஷண் அபியான் திட்டத்தின் கீழ் சந்தை தலையீட்டு விலையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மிஷன் திட்டத்தின் கீழ் குளிர்பதன வசதிகள் மற்றும் மாம்பழக் கூழ் உற்பத்தி அலகுகளை அமைக்க வேண்டும். பழரச பானங்களில் 20 சதவீதம் பழரசக் கூழ் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

    பானப் பொருட்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்ப்பதற்கு பதிலாக இயற்கை பழரசத்தைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நடுத்தர வணிகர்களின் சிண்டிகேட் அமைப்பை ஒழிக்க கடுமையான ஒழுங்குமுறை விற்பனை முறையை அமல்படுத்த வேண்டும்.

    விவசாயிகளை ஒடுக்கும் நடுத்தர வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்டத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மாம்பழத்தின் மகசூலை இந்த பருவத்தில் பாதுகாக்க வேண்டும். இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு எம்பி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ 

    September 24, 2025
    தேசியம்

    71-வது தேசிய விருது: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    September 23, 2025
    தேசியம்

    வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா: கனமழைக்கு இதுவரை 7 பேர் பலி – பாதிப்பு நிலவரம் என்ன?

    September 23, 2025
    தேசியம்

    சினிமா டிக்கெட் விலையை ரூ.200 என நிர்ணயித்த கர்நாடக அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

    September 23, 2025
    தேசியம்

    இந்திய இளைஞர்களின் வேலையின்மைக்கும் வாக்குத் திருட்டுதான் காரணம்: ராகுல் காந்தி

    September 23, 2025
    தேசியம்

    “அனைவருக்கும் நன்றி!” – 2 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ஆசம் கான்

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வால்மீகியாக நடிக்கவில்லை: அக்‌ஷய் குமார் விளக்கம்
    • சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
    • நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை
    • மீண்டும் வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு
    • போட்டியிட்டே ரெண்டு மாமாங்கமாச்சு… தேனியில் தேய்ந்து வரும் காங்கிரஸ்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.