Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மீண்டும் சிவகாசி… வேண்டும் சிவகாசி! – ‘தைரியமாக’ தொகுதி மாறும் ராஜேந்திர பாலாஜி
    மாநிலம்

    மீண்டும் சிவகாசி… வேண்டும் சிவகாசி! – ‘தைரியமாக’ தொகுதி மாறும் ராஜேந்திர பாலாஜி

    adminBy adminJune 26, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீண்டும் சிவகாசி… வேண்டும் சிவகாசி! – ‘தைரியமாக’ தொகுதி மாறும் ராஜேந்திர பாலாஜி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.

    அ​தி​முக ஆட்​சி​யில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்​டு​கள் அமைச்​ச​ராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதி​முக-​வின் அடை​யாள​மாக மாற்​றிக் கொண்​ட​வர் கே.டி.​ராஜேந்​திர பாலாஜி. இந்த நிலை​யில், 2019 மக்​கள​வைத் தேர்​தலில் விருதுநகர் தொகு​தி​யின் சிட்​டிங் அதி​முக எம்​பி-​யாக இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செய​லா​ளர் ராதாகிருஷ்ணனுக்கு மீண்​டும் அதி​முக சீட் கொடுக்​க​வில்​லை. அப்போது தொகு​தியை தந்​திர​மாக தேமு​தி​க-வுக்கு தள்​ளி​விட்​ட​தில் ராஜேந்​திர பாலாஜி​யின் ஆலோ​சனை​யும் இருந்​தது.

    இதையடுத்​து, ராதாகிருஷ்ணனும் அவரது ஆதர​வாளர்​களும் ராஜேந்​திர பாலாஜி​யுடன் அப்​போது மல்​லுக்கு நின்​ற​னர். “அடுத்த முறை சிவ​காசி தொகு​தி​யில் எப்​படி ஜெயிக்​கி​றாய் என்று பார்க்​கி​றோம்” என்ற அளவுக்கு பெரி​தானது இந்த மனக்​கசப்​பு. சிவ​காசி தொகு​தி​யில் ராதாகிருஷ்ணனின் சமூ​தாய ஓட்​டு​கள் கணிச​மாக இருப்​ப​தால் இந்த மிரட்​டலுக்கு சற்றே அஞ்​சி​னார் பாலாஜி. அதனால், முன்​னெச்​சரிக்​கையோடு 2021 தேர்​தலில் ராஜ​பாளை​யம் தொகு​திக்கு மாறி​னார். ஆனால், அங்கு அவரால் கரைசேர முடிய​வில்​லை.

    தோற்​றாலும் ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் பொதுக்​கூட்​டங்​கள், ஆர்​பாட்​டங்​களை நடத்​திய ராஜேந்​திர பாலாஜி, கட்சி நிர்​வாகி​கள் இல்ல நிகழ்ச்​சிகளி​லும் தவறாது கலந்து கொண்​டார். இந்த நிலை​யில், சமீப கால​மாக அவரது பார்வை சிவ​காசி தொகு​தியை நோக்​கித் திரும்பி இருக்​கிறது. சிவ​காசி​யில் மக்​களுக்கு நல உதவி​களை வழங்கி வரும் ராஜேந்​திர பாலாஜி, மீண்​டும் சிவ​காசி​யில் போட்​டி​யிட முனைப்​புக்​காட்​டு​வ​தாகச் சொல்​கி​றார்​கள். இதை உறு​திப்​படுத்​தும் வித​மாக, பூத் கமிட்டி நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் பேசிய அவர், “பொதுச்​செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி உத்​தர​விட்​டால் சிவ​காசி தொகு​தி​யில் போட்​டி​யிடு​வேன்” என்று தனது உள்​ளக் கிடக்​கையை வெளிப்​படுத்தி உள்​ளார்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதி​முக நிர்​வாகி​கள் சிலர், “2011-ல் முதல் முறை​யாக சிவ​காசி தொகு​தி​யில் போட்​டி​யிட்ட ராஜேந்​திர பாலாஜி, சுமார் 35 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். இதையடுத்து நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில் சிவ​காசி ஊராட்சி ஒன்​றிய துணை தலை​வர் பதவிக்கு ஜெயலலிதா அறி​வித்த வேட்​பாளரை தோற்​கடித்து அதி​முக போட்டி வேட்​பாளரை ஜெயிக்​க​வைத்​தார்​கள். இதனால், அப்​போதைய மாவட்​டச் செய​லா​ள​ரான ஆர்​.பி.உதயகு​மாரிடம் இருந்து மாவட்​டச் செய​லா​ளர் பதவி​யும் அமைச்​சர் பதவி​யும் பறிக்​கப்​பட்டு ராஜேந்​திர பாலாஜிக்கு வழங்​கப்​பட்​டது. அதி​லிருந்தே பாலாஜிக்கு ஏறு​முகம் தான்.

    இந்த நிலை​யில், சிவ​காசி சட்​டமன்​றத் தொகு​தி​யில் 2016-ல் 14 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றுப் போன காங்​கிரஸ், 2019 மக்​களவை தேர்​தலில் சுமார் 20 ஆயிரம் வாக்​கு​கள் கூடு​தலாக பெற்​றது பாலாஜிக்கு சிக்​கலை உண்​டாக்​கியது. தொகுதி தங்​களுக்​குக் கிடைக்​காத ஆதங்​கத்​தில் ராதாகிருஷ்ணன் தரப்​பினர் எதிர்த்து வேலை செய்​ததும் இதற்கு முக்​கிய காரணம். இந்த நிலை​யில், 2021 சட்​டமன்​றத் தேர்​தலுக்கு முன்​ன​தாக நடந்த ஊரக உள்​ளாட்​சித் தேர்​தலில் ராதாகிருஷ்ணன் தரப்​பினரின் மறை​முக ஆசி​யுடன் சிவ​காசி ஊராட்சி ஒன்​றி​யத்தை திமுக கைப்​பற்​றியது.

    இதையெல்​லாம் பார்த்​து​விட்டு 2021-ல் ஆஸ்​தான ஜோதிடரின் அறி​வுரைப்​படி சிவ​காசியை விட்​டு​விட்டு ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார் ராஜேந்​திர பாலாஜி. ஆனால், மஞ்​சள் சட்டை மாவீரனுக்கு ஜோதிடம் கைகொடுக்​க​வில்​லை. இருந்​தா​லும், ‘மீண்​டும் நான் ராஜ​பாளை​யத்​தில் தான் போட்​டி​யிடு​வேன்’ என்று இத்​தனை நாளும் சொல்​லிக்​கொண்டே இருந்​தவர் இப்​போது சிவ​காசி பக்​கம் திரும்பி இருக்​கி​றார்.

    பட்​டாசு விபத்​தில் பலி​யானோர் குடும்​பத்​துக்கு நிதி​யுத​வி, குழந்​தை​களின் கல்​விச் செலவை ஏற்​பது, இளைஞர்​களுக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வழங்​கு​வது என சிவ​காசி​யையே சுற்​றிச் சுற்றி வரு​கி​றார் பாலாஜி. சிவ​காசி​யில் இவருக்கு சவாலாக இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த 2022 இறு​தி​யில் உடல்​நலக்​குறை​வால் கால​மாகி​விட்​டார். அதனால், அவரது ஆதர​வாளர்​கள் பழைய பகையை எல்​லாம் மறந்​திருப்​பார்​கள் என்ற நினைப்​பில் பாலாஜி மீண்​டும் சிவ​காசிக்கு வரு​கி​றார். ஆனால், ராதாகிருஷ்ணன் இறந்த சமயத்​தில் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு திமுக நிர்​வாகி​கள் சகிதம் வந்து அவருக்கு அஞ்​சலி செலுத்​தி​னார். இப்​போது இதை​யும் சிலர் பாலாஜிக்கு எதி​ராக திருப்ப ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்” என்​றார்​கள்.

    சாந்​த​மான அரசி​ய​லால் அனைத்து தரப்​பினரை​யும் ஈர்க்​கும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசின் அரசி​யல் வியூ​கங்​களுக்கு முன்​னால் இம்​முறை பாலாஜி​யின் பாச்சா பலிக்​கிறதா என்று பொறுத்​திருந்து பார்​க்​கலாம்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    June 30, 2025
    மாநிலம்

    செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

    June 30, 2025
    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி
    • ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?
    • கூர்மையான மூளை முதல் எடை இழப்பு வரை: சர்க்கரையை விட்டு வெளியேறுவதன் 5 அற்புதமான நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.