Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா பயணம்
    தேசியம்

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா பயணம்

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா பயணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது.

    இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவை சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் துணை அதிபர் ஹான் ஜெங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலும் தோவல் பங்கேற்க உள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில், “குவிங்டாவ் நகரில் நடைபெறும் எஸ்சிஏ பாதுகாப்பு துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். இதில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

    உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கவும் ஆவலாக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

    மேலும் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஆழமான வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் ராஜ்நாத் சிங் வலியுறுத்த உள்ளார். இந்த பயணத்தின்போது, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களை தனியாக சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக் எல்லையில் சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு போர் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் படைகளை குவித்தன.

    இதனால் இருதரப்பு உறவு மோசமடைந்தது. அதன் பிறகு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பல்வேறு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு படைகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து போர் பதற்றம் தணிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அமைச்சர் ஒருவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

    June 29, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

    June 29, 2025
    தேசியம்

    டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி அபகரிப்பு

    June 29, 2025
    தேசியம்

    உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை

    June 29, 2025
    தேசியம்

    “உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்
    • ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்
    • வாக்குச்சாவடி நிலைய முகவராக மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் தகவல்
    • கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது
    • பெண் ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கினார் ஆளுநர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.