Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
    மாநிலம்

    பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி தொடர்பாக விவாதிக்க ஜூன் 24, 25-ம் தேதிகளில் 42 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, முதல் நாளான நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் காலையும் பின்னர் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளை பிற்பகலிலும் பழனிசாமி சந்தித்தார்.

    இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், அனைவரும் இப்போது இருந்தே தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அப்போது பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    அதேபோல், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று பழனிசாமி தெரிவித்தார். மேலும் கூட்டணி விவகாரம் தொடர்பாக நான் பார்த்து கொள்கிறேன்.

    நீங்கள் அனைவரும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்காக, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு, சமூக வலைதள பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இரண்டாம் நாளாக இன்று காலை திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

    June 28, 2025
    மாநிலம்

    அரசு விழாவுக்காக மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக பேசிய நபரை தேடி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    June 28, 2025
    மாநிலம்

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    June 28, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 26,000 கன அடியாக அதிகரிப்பு

    June 28, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் துறை நோட்டீஸ்

    June 28, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் – ஜூலை 1ல் தொடங்குகிறார் ஸ்டாலின்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதிய வயது பெற்றோருக்குரியது: குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் போது நல்ல Vs மோசமான காவல்துறை நுட்பம் உண்மையில் செயல்படுகிறதா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘மெட்ராஸ் மேட்னி’ ஓடிடியில் ஜூலை 4-ல் ரிலீஸ்!
    • மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
    • எஃப் 1 பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 1: பிராட் பிட்டின் விளையாட்டு நாடகம் இந்தியாவில் ரூ .5.25 கோடி சம்பாதிக்கிறது
    • ”மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல” – சிவராஜ் சிங் சவுகான்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.