Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“சங்பரிவார் அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” – பினராயி விஜயன்
    தேசியம்

    “சங்பரிவார் அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” – பினராயி விஜயன்

    adminBy adminJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “சங்பரிவார் அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” – பினராயி விஜயன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயனின் பேஸ்புக் பதிவில், “இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமான அவசரநிலை பிரகடனம், அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இது திடீரெனவும் எதிர்பாராததாகவும் ஏற்பட்ட பேரழிவு அல்ல. மாறாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்குகள் மற்றும் சிவில் உரிமைகள் அரிக்கப்பட்டதன் கொடூரமான உச்சக்கட்டமாகும்.

    அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவு, தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையின் பயங்கரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. நாடு தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலையை எதிர்கொள்கிறது. அன்று இந்திரா காந்தி அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தினார், இன்று சங்பரிவார் அரசாங்கம் அரசியலமைப்பையே ஒழிக்க முயற்சிக்கிறது.

    அவசரநிலையை எதிர்கொண்ட எண்ணற்ற ஜனநாயக போராளிகளுக்கு, இது ஒரு வரலாற்றுப் பாடம் மட்டுமல்ல. இது அரசால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரத்தின் எரியும் நினைவு. அந்த நினைவுகளை இழக்காமல் எதிர்காலப் போராட்டங்களுக்கான ஆற்றலாக அவசரநிலையின் வரலாற்றை நாம் பாதுகாக்க வேண்டும். அதை நாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    தேசியம்

    ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

    June 29, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

    June 29, 2025
    தேசியம்

    டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி அபகரிப்பு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்கன்: திரை விமர்சனம்
    • ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!
    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.