Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: ஆக்சியம் 4 திட்டம் மீது எகிறும் எதிர்பார்ப்பு!
    தேசியம்

    இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: ஆக்சியம் 4 திட்டம் மீது எகிறும் எதிர்பார்ப்பு!

    adminBy adminJune 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: ஆக்சியம் 4 திட்டம் மீது எகிறும் எதிர்பார்ப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4ன் ஏவுதல் இன்று (ஜூன் 25) திட்டமிடப்பட்டுள்ளது.

    புளோரிடாவில் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39ஏ- லிருந்து இன்று இந்திய நேரப்படி நண்பகல் 12.00 மணியளவில் ஆக்சியம்-4 ஏவுதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

    இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆக்சியம்-4ன் இன்றைய ஏவுதலுக்கு அனைத்து அமைப்புகளும் நன்றாக உள்ளன. ஏவுதலுக்கான வானிலையும் 90 சதவீதம் சாதகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த ஜூன் 11-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் 4-ன் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஜூன் 8 மற்றும் ஜூன் 10-ம் தேதிகளின் மோசமான வானிலை காரணமாக இந்த ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.

    சுபான்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

    இதன்​படி, அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் உள்ள கென்​னடி விண்​வெளி மையத்​திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் டிராகன் விண்​கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்​கலத்​தில் அமெரிக்​கா, இந்​தி​யா, போலந்து மற்​றும் ஹங்​கேரி நாடு​களைச் சேர்ந்த தலா ஒரு​வர் என 4 பேர் பயணிக்க உள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின் (இஸ்​ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானி​யாக செயல்பட உள்ளார். இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது. இவர்கள் அங்கு 14 நாட்​கள் தங்கி இருப்​பார்​கள் எனக் கூறப்​படு​கிறது.

    கடந்த 1984-ம் ஆண்டு சர்​வ​தேச விண்​வெளி நிலையத்​துக்கு சென்ற ரஷ்​யா​வின் சோயுஸ் விண்​கலத்​தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்​தார். சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்ற முதல் இந்​தி​யர் என்ற பெருமை இவருக்கு கிடைத்​தது. 41 ஆண்​டு​களுக்​குப் பிறகு விண்​வெளி நிலை​யம் செல்​லும் இந்​தி​யர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்​ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் லக்​னோவை சேர்ந்​த சுபான்ஷு சுக்​லா, கடந்த 2006-ல் இந்​திய விமானப்​படை​யில் சேர்ந்தார். 2024-ம் ஆண்​டில் குழு கேப்​ட​னாக பொறுப்​பேற்​றார். இந்த சூழ்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோ​வின் ககன்​யான் திட்​டத்​துக்​காக சுபான்ஷு தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​காக ரஷ்​யா​வின் யூரி காகரின் விண்​வெளி மையத்​தில்​ சேர்ந்​து இவர் சிறப்​புப் பயிற்​சி பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

    June 29, 2025
    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    தேசியம்

    ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

    June 29, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு
    • வங்கதேச கேப்டன் ஷாண்டோ ராஜினாமா
    • மார்கன்: திரை விமர்சனம்
    • ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!
    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.