Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்
    உலகம்

    ‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக நான் கருதுகிறேன்.போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் செய்த பின்னரும், இஸ்ரேல் வெளியே வந்து ஏராளமான குண்டுகளை வீசியுள்ளது. இது நான் இதற்கு முன்பு பார்த்திராத மிகப்பெரிய அளவிலான குண்டு வீச்சு.

    நம்மிடம் இரண்டு நாடுகள் உள்ளன. அவை நீண்ட காலமாக மிகக் கடினமாக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் அவை தாம் என்ன செய்கின்றன எனத் தெரியாமலேயே இதை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.

    இன்று போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில், ஈரான் தனது வான்வெளியில் ஏவுகணைகளை வீசியதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தீவிரமான தாக்குதலை தொடங்கியுள்ளது.

    நடந்தது என்ன? – முன்னதாக ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இன்று 12-வது நாளை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முன்மொழிவின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

    இந்த நிலையில், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியுள்ள ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளது. போர்நிறுத்த மீறலுக்கு பதிலளிக்கும் எங்களின் கொள்கையின்படி, ஈரானில் உள்ள அரசு சொத்துக்கள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து அதிதீவிர நடவடிக்கைகளைத் தொடர நான் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறினார். இதனையடுத்து ஈரான் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

    இருப்பினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் உறுதியாக மறுத்துள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர் இஸ்ரேல் மீது எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பீட் டேவிட்சன் முதல் முறையாக அப்பா ஆனார், 9/11 சோகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகளுக்கு பெயர் வைத்தார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    அடிலெய்டில் இந்திய வம்சாவளி மனைவியைக் கொன்றதாக கணவர் மீது குற்றச்சாட்டு; சிபிஆரால் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    டொராண்டோவில் இந்திய வம்சாவளி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்; 32 வயதான அப்துல் கஃபூரிக்கு கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    டொராண்டோவில் இந்திய வம்சாவளி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்; 32 வயதான அப்துல் கஃபூரிக்கு காமடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    கலிபோர்னியாவில் ஃபெராரி விபத்தில் கால் ஆஃப் டூட்டி இணை உருவாக்கியவர் வின்ஸ் ஜாம்பெல்லா கொல்லப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    ஜிம்மி கார் சர்ச்சைக்குரிய ‘கேரியர்-எண்டர்’ ஹோலோகாஸ்ட் ஜோக் குறித்து மௌனம் கலைத்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் பூனையை வீட்டில் எவ்வளவு நேரம் பாதுகாப்பாக விட்டுவிடலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் கிறிஸ்துமஸ் மரம் தும்மல் மற்றும் ஒவ்வாமைகளைத் தூண்டும்: அது எப்படி நிகழ்கிறது மற்றும் விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பீட் டேவிட்சன் முதல் முறையாக அப்பா ஆனார், 9/11 சோகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகளுக்கு பெயர் வைத்தார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2025 இல் உலகம் பார்வையிட்ட 10 மிகவும் விலையுயர்ந்த இடங்கள்
    • அடிலெய்டில் இந்திய வம்சாவளி மனைவியைக் கொன்றதாக கணவர் மீது குற்றச்சாட்டு; சிபிஆரால் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.