Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
    மாநிலம்

    கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக மக்களையும் இணைந்து அவர்கள் பங்களிப்புடன் திருவிழா நடத்த வேண்டும் என 2014-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடந்த ஆண்டு கண்டதேவி தேரோட்டத்தின் போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுக்க டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறும் நோக்கத்தில் சில நாட்டார்கள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் அழைத்துச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க முடியாத சூழல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவானது.

    இந்த ஆண்டு ஜூலை 8-ல் கண்டதேவி தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது பட்டியல் சமூகத்தினர் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “கோயில் விழாவில் எவ்வித பாகுபாடும் இல்லை. கண்டதேவி கோயிலைப் பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்துக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதிய பாகுபாடு பார்ப்பது இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் எங்குமே சாதிய பாகுபாடுகள் இல்லை என உறுதியாக சொல்ல முடியுமா? அரசியலுக்கு வேண்டுமென்றால் இப்படி நீங்கள் சொல்லலாம், நீதிமன்றத்தில் அப்படி சொல்லி ஏமாற்ற முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும் சாதிய பாகுபாடு இன்னும் புழக்கத்தில் உள்ளது. கண்டதேவி கோயில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!

    September 2, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    September 2, 2025
    மாநிலம்

    செப்.4-ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைப்பு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

    September 1, 2025
    மாநிலம்

    தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை

    September 1, 2025
    மாநிலம்

    “தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல்

    September 1, 2025
    மாநிலம்

    இபிஎஸ் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை
    • எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!
    • ஃபர்ஹானா போடி துபாய் கவர்ச்சியை வெனிஸ் திரைப்பட விழாவிற்கு கொண்டு வருகிறார்
    • ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
    • தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.