Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை 5 நாள் காவலில் எடுத்தது என்ஐஏ
    தேசியம்

    பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை 5 நாள் காவலில் எடுத்தது என்ஐஏ

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை 5 நாள் காவலில் எடுத்தது என்ஐஏ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 24 Jun, 2025 07:50 AM

    Published : 24 Jun 2025 07:50 AM
    Last Updated : 24 Jun 2025 07:50 AM

    பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை 5 நாள் காவலில் எடுத்தது என்ஐஏ

    ஜம்மு: பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 நாள் காவலில் எடுத்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக தீவிர விசாரணை நடைபெற்றது.

    இதில், மிகப்பெரும் திருப்புமுனையாக பஹல்காமின் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இவர்கள் இருவரும்தான் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பஹல்காமில் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளின் அடையாளங்களையும் என்ஐஏவிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மூன்று தீவிரவாதிகளும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் என்ஐஏ உறுதிப்படுத்தியுள்ளது.

    பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜம்மு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ரித்தேஷ் குமார் துபேயின் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஜூன் 27-ம் தேதி வரை அதாவது ஐந்து நாட்களுக்கு என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

    என்ஐஏ விசாரணையின்படி, தாக்குதலுக்கு முன்பு, பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் ஹில் பார்க்கில் உள்ள ஒரு பருவகால குடிலில் தீவிரவாதிகள் என்று தெரிந்தே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அந்த மூவரையும் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தளவாட உதவிகளையும் அந்த இருவரும் வழங்கியுள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொல்லும் இதுவரையில்லாத மிகக் கொடூரமான தாக்குதலை அந்த 3 தீவிரவாதிகளும் நடத்தியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!
    • பல் மருத்துவர்களின் கூற்றுப்படி, பற்களை ரகசியமாக அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்
    • 477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!
    • ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.