Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நோய் தடுப்பு குறித்து ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் தொடங்கி வைத்தார்
    மாநிலம்

    நோய் தடுப்பு குறித்து ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் தொடங்கி வைத்தார்

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நோய் தடுப்பு குறித்து ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் தொடங்கி வைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    சென்னை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்வில், இத்திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    நோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப காலத்திலேயே நோயை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. அதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16,566 பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 50.76 லட்சம் மாணவர்களுக்கு தேசிய சிறார் நல திட்டம் மூலம் மருத்துவ அலுவலர்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்து பயிற்சி வழங்குவார்கள். இந்த மாணவர்கள் சுகாதார துறையின் தூதர்களாக இருந்து, நோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரம்ப கட்டத்திலேயே நோய்களை கண்டறிவது குறித்து தங்கள் குடும்பத்தினரிடம் விரிவாக எடுத்துக் கூறுவார்கள். இதன்மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    வளர்இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் – வாழ்க்கை திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன்படி, பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ குழுக்கள், ஆலோசனை குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மனஅழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள். தேசிய சிறார் திட்டத்தின்கீழ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளை பரிசோதிக்க 3 புதிய நடமாடும் மருத்துவ குழுக்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில், எம்எல்ஏக்கள் த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராய நகர்), சுகாதார துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோயில் சொத்துகளுக்கான நிதி ஆதாரம் என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் தமிழக பாஜக

    July 13, 2025
    மாநிலம்

    விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை

    July 13, 2025
    மாநிலம்

    ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: தவளேஸ்வரம் அணை திறப்பால் ஏனாமில் புகுந்த வெள்ளம்

    July 13, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் விபத்து எதிரொலி: ரயில் பயணிகளுக்காக சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    July 13, 2025
    மாநிலம்

    உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17 அதிமுக ஆர்ப்பாட்டம்

    July 13, 2025
    மாநிலம்

    ஜூலை 16, 17-ல் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோயில் சொத்துகளுக்கான நிதி ஆதாரம் என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் தமிழக பாஜக
    • அடிப்படை டம்பல்ஸுடன் வீட்டில் எடை பயிற்சி செய்வது எப்படி
    • விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை
    • ஒரு குழந்தை தவறு செய்யும் போது சொல்ல வேண்டிய 6 விஷயங்கள்
    • ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: தவளேஸ்வரம் அணை திறப்பால் ஏனாமில் புகுந்த வெள்ளம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.