Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம்
    தேசியம்

    பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம்

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது.

    இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு குழுக்களை அமைத்தது. அவற்றில் சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சசி தரூர் தலைமையிலான குழு கடந்த மாதம் சென்றது. அந்நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகளை சந்தித்து பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எடுத்துரைத்து வெற்றிகரமாக நாடு திரும்பினார் சசி தரூர்.

    இந்நிலையில், ‘இந்து’ ஆங்கில நாளிதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் உலக நாடுகள் உடனான உறவை மேம்படுத்த வேண்டும் என்ற அவரது ஆர்வம் போன்றவற்றுக்கு கூடுதலாக ஆதரவு வழங்க வேண்டும். சர்வதேச அளவில் பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறார். இந்தியா ஒன்றுபட்டால், உலக நாடுகள் மத்தியில் நமது நாட்டின் குரலை மிக தெளிவாக, உறுதியாக வெளிப்படுத்த முடியும் என்பதை இது உறுதிப்படுத்தி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து வெளிநாட்டு தலைவர்களிடம் விரிவாக விளக்கினோம். தீவிரவாதத்துடன் பாகிஸ்தான் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளதை எடுத்துரைத்தோம்.

    நாங்கள் அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் இருந்தும் ஒரு குழுவினர் வந்திருந்தனர். எனினும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து நாங்கள் எடுத்துரைத்த கவலைகளை அமெரிக்க பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர். தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். நமது எல்லைகளுக்கு அப்பால் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலின் தீவிரம், தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்று தருவது, அதற்கு உலக அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதே எங்கள் பயணத்தின் நோக்கம்.இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசி தரூர். இவர் தொடர்ந்து பிரதமர் மோடியை பாராட்டி வருவதால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்து சசி தரூர் கூறும்போது, ‘‘கடந்த 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கொள்கைக்கும் விசுவாசமாக இருக்கிறேன். கட்சி மாற மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!
    • பல் மருத்துவர்களின் கூற்றுப்படி, பற்களை ரகசியமாக அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்
    • 477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!
    • ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.