Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?
    உலகம்

    நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?

    adminBy adminJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன. இதன் மீதான வாக்களிப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நேற்று கூடியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன.

    ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்துக்கான வரைவுத் தீர்மானத்தின் மீது எப்போது வாக்களிப்பு நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா அல்லது சீனாவின் வீட்டோக்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இந்த வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கும் என்று தெரிகிறது. எனவே இந்த தீர்மானம் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த வரைவு தீர்மானம், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கிறது. ஆனாலும் இந்த தீர்மானத்தில் அமெரிக்காவின் பெயரோ அல்லது இஸ்ரேலின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. நேற்று ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, இந்தக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்க தாக்குதல்களைக் கண்டித்தன.

    சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ காங் பேசுகையில், “மத்திய கிழக்கில் அமைதியை வலிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அடைய முடியாது. ஈரானிய அணுசக்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர வழிமுறைகள் தீர்ந்துவிடவில்லை, அமைதியான தீர்வுக்கான நம்பிக்கை இன்னும் உள்ளது” என்று கூறினார்.

    ஆனால், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் டோரதி ஷியா, “அமெரிக்கா தீர்க்கமாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இஸ்ரேலை ஒழிக்கும் முயற்சியை நிறுத்தி, அணு ஆயுதங்களை உருவாக்குவதை நிறுத்துமாறு பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்துகிறோம். ஈரான் நீண்ட காலமாக அதன் அணு ஆயுதத் திட்டத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் எங்கள் நல்லெண்ண முயற்சிகளை முறியடித்துள்ளது. ஈரானில் அணு ஆயுதம் இருக்கக் கூடாது” என்றார்.

    தொடர்ந்து பேசிய ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வாசிலி நெபென்சியா, “மத்திய கிழக்கில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மீண்டும் ஒருமுறை துன்பத்தை ஏற்படுத்த, அமெரிக்காவின் விசித்திரக் கதைகளை நம்பும்படி நாம் கேட்கப்படுகிறோம். வரலாறு நமது அமெரிக்க சகாக்களுக்கு எதையும் கற்பிக்கவில்லை என்ற எங்கள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி குற்றம் சாட்டினார், “அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. இதில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் ஒரு அரசியல் ஆயுதமாக கையாளப்பட்டுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ராஜதந்திரத்தை அழிக்கிறது. அமைதியான அணுசக்திக்கான சட்டபூர்வமான உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்குப் பதிலாக, அது ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எனது நாட்டின் நலன்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று இரவானி கவுன்சிலிடம் கூறினார்.

    அதே நேரத்தில் இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவைப் பாராட்டினார்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய பிரிட்டனின் ஐ.நா. தூதர் பார்பரா உட்வார்ட்,”ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த கவலைகளுக்கு ராணுவ நடவடிக்கை மட்டும் நீடித்த தீர்வைக் கொண்டு வர முடியாது. இப்போது நிதானமாகக் காட்டுமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ராஜதந்திர தீர்வைக் காணுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டொராண்டோவில் இந்திய வம்சாவளி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்; 32 வயதான அப்துல் கஃபூரிக்கு கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    டொராண்டோவில் இந்திய வம்சாவளி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்; 32 வயதான அப்துல் கஃபூரிக்கு காமடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    கலிபோர்னியாவில் ஃபெராரி விபத்தில் கால் ஆஃப் டூட்டி இணை உருவாக்கியவர் வின்ஸ் ஜாம்பெல்லா கொல்லப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    ஜிம்மி கார் சர்ச்சைக்குரிய ‘கேரியர்-எண்டர்’ ஹோலோகாஸ்ட் ஜோக் குறித்து மௌனம் கலைத்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    MAGA பிளவு: ஹெரிடேஜ் அறக்கட்டளை ஊழியர்கள் நிக் ஃபியூண்டஸ் உடனான டக்கர் கார்ல்சன் நேர்காணலை ஜனாதிபதி ஆதரித்த பிறகு வெளியேறினர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    Real-life Stranger Things: Hawkins Lab site ஐ ஆராய சென்ற பெண் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணம் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காபியின் பலன்கள்: உங்கள் சருமத்திற்கு உண்மையில் எவ்வளவு காபி நல்லது, அது உங்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கும் போது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொராண்டோவில் இந்திய வம்சாவளி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்; 32 வயதான அப்துல் கஃபூரிக்கு கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானம் இல்லாமல் ஐரோப்பாவிலிருந்து ஆசியா: ஒரு ரயில் பயணம் எப்படி 21 நாட்களில் சாத்தியமாகும்
    • 22 டிசம்பர் 2025 அன்று பஸ் அளவுள்ள சிறுகோள் பூமியைக் கடந்து சென்றதை நாசா உறுதிப்படுத்துகிறது, அடுத்து என்ன எதிர்பார்க்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொராண்டோவில் இந்திய வம்சாவளி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்; 32 வயதான அப்துல் கஃபூரிக்கு காமடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.