Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்
    மாநிலம்

    இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்

    adminBy adminJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து முன்னணி நிர்வாகி கிஷோர்குமார் இவற்றை வாசித்தார்.

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அறநிலையத் துறை கார்த்திகை தீபம் ஏற்ற மறுக்கிறது. அதற்காக 30 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். எனவே, வரும் கார்த்திகை மாதம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் பகல்ஹாமில் புகுந்து இந்து சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். அதற்கு பதிலடியாக, நமது ராணுவத்தினரும், பிரதமர் மோடியும் குங்குமத்தின் பெயரை வைத்து தாக்குதல் நடத்தி, பாரதம் வல்லரசு என்பதை நிரூபித்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடியைப் பாராட்ட வேண்டும்.

    சென்னிமலை, திருப்பரங்குன்றம், பழநிமலை என முருகனின் தலங்களில் பிரச்சினை செய்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி, மாமிசம் சாப்பிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குன்றம் குமரனுக்கே என்பதால், மலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

    இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். கோயில்களிலிருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலங்கிப் போயுள்ளார். இங்கு ஒரு காக்கிச்சட்டைகூட இல்லை.

    உள்ளே ஒரு போலீஸ் வரவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு முருகக் கடவுள்தான். இந்துக்களையும், இந்து சமய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சியைகளையும் புறக்கணிக்க வேண்டும். வரும் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாக்கு வங்கியை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

    மாநாட்டில் பல லட்சம் பேர் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். எனவே. மாதந்தோறும் கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். மேலும், நாத்திகம் சொல்லி நாட்டை நாசப்படுத்தியவர்களை விரட்டியடிக்க, இனி மாதந்தோறும் கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அவர் முதலில் வெளியே வரட்டும்’ – விஜய் பிரச்சாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து

    September 10, 2025
    மாநிலம்

    ‘தவெக தொண்டர்கள் மரம் ஏறி நிற்க கூடாது’ – விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகள்

    September 10, 2025
    மாநிலம்

    “இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

    September 10, 2025
    மாநிலம்

    பொள்ளாச்சியில் விவசாய, தொழில் துறை அமைப்புகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்

    September 10, 2025
    மாநிலம்

    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

    September 10, 2025
    மாநிலம்

    தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அவர் முதலில் வெளியே வரட்டும்’ – விஜய் பிரச்சாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து
    • ஒரு சிறந்த இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி, இது வீட்டின் மிகவும் ஆபத்தான அறை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம் – மீண்டும் செயல்பட தொடங்கிய காத்மாண்டு விமான நிலையம்
    • ‘தவெக தொண்டர்கள் மரம் ஏறி நிற்க கூடாது’ – விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகள்
    • இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.