சென்னை: 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித் தட சாலைகள் உள்பட பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்: 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித் தட சாலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட்டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்: ரூ.17,154 கோடி மதிப்பீட்டில் 9,620 கி.மீ நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் 996 பாலம், சிறு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.731 கோடி மதிப்பில் 164 கி.மீ. நீளத்துக்கு நகர்ப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள. ரூ.2,074 கோடி மதிப்பீட்டில் சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,805 கி.மீ. நீளச் சாலைகளில் ஓடுதளப் பரப்பினை மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.662 கோடி மதிப்பீட்டில் 1,652 சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.
புறவழிச்சாலை,இணைப்புச் சாலைகள்: ரூ.307.8 கோடி மதிப்பீட்டில் மண்ணச்சநல்லூர் (கட்டம் 1) இலுப்பூர், பார்த்திபனூர், ராசிபுரம் கட்டம் 1 பிரிவு-2, திருத்துறைப்பூண்டி கட்டம்-1 பவானி கட்டம் II, முதுகளத்தூர், திருத்தணி, குன்னூர் மற்றும் நாமக்கல் கட்டம் I ஆகிய பத்து புறவழிச்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ரூ.20.85 கோடி மதிப்பிட்டில் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி வழியாக திண்டல் சந்திப்பிலிருந்து கனிராவுத்தர்குளம் செல்லும் சாலை, ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் ஜவான்ஸ் பவன் சாலை, ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் பசுமலையில் இணைப்புச்சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ரூ.4,907.17 கோடி மதிப்பீட்டில் 5,064.53 கி.மீ நீளமுள்ள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பன்னாட்டு நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள்: சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ரூ.240.06 கோடி மதிப்பீட்டில் நக்கசேலம், குரும்பலூர் புறவழிச்சாலைகளுடன் கூடிய துறையூர் பெரம்பலூர் சாலை, ரூ.349.94 கோடி மதிப்பீட்டில் மோகனூர் நாமக்கல். சேந்தமங்கலம் ராசிபுரம் சாலை, ரூ.251.29 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை சாலை, ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் – மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சாலை மேம்பாடுத் திட்டம்-II: இத்திட்டத்தின் கீழ் ரூ.129.94 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் பரங்கிப்பேட்டை சாலை ரூ. 144.64 கோடி மதிப்பீட்டில் ஓமலூர் மேச்சேரி சாலை. ரூ.104.70 கோடி மதிப்பீட்டில் சித்தோடு ஈரோடு சாலை, ரூ.176.58 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி செங்கோட்டை கொல்லம் சாலை ஆகிய 4 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.4061.71 கோடியில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள்: ரூ.3.909.16 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுத் திட்டத்தின் கீழ் 88 சாலை மற்றும் 16 பாலப்பணிகளும், ரூ.152.55 கோடி மதிப்பீட்டில் காலமுறை புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலையில் 8 சாலைப்பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நம்ம சாலை செயலி: சாலைகளில் கண்டறியப்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் உதவியுடன் அறிந்து சரிசெய்திட நம்ம சாலை செயலி என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வழியாகப் பொதுமக்கள் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க முடியும். அதன் மூலம் சாலைப் பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்யப்படுகின்றன.
பொறியாளர்களுக்குப் பயிற்சிகள்: வளர்ந்து வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் களத்தில் கடைப்பிடித்து சாலை – பாலப்பணிகள் சிறப்பாக நடைபெறப் பொறியாளர்களுக்கும். இதர அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 379 பொறியாளர்களுக்கும், 112 தொழில்நுட்பம் சாரா அலுவலர்களுக்கும், விரிவான பயிற்சித் திட்டத்தின் (CTP) கீழ் 2,881 பொறியாளர்களுக்கும், மற்றும் 832 தொழில்நுட்பம் சாரா அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 368 பொறியாளர்களுக்கும், 40 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர்களுக்கும். 41 துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மற்றும் தலைமைச் செயலகத்தின் 134 பதிவு அதிகாரிகளுக்கும் இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள்: நாமக்கல், செங்கல்பட்டு, நீலகிரி, தேனி, மதுரை, தூத்துக்குடி சிவகங்கை. ராமநாதபுரம், ஈரோடு, கோயம்புத்தூர் விருதுநகர் கரூர். திருப்பூர். திருவாரூர். நாகப்பட்டினம் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் திண்டுக்கல். திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 22 மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. 454 சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பாதுகாப்புப் பொறியாளர்கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாலைப் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு வளர்க்கப்பட்டுள்ளது.
919 புதிய பணி நியமனங்கள்: 84 உதவிப்பொறியாளர்கள், 416 இளநிலை வரைதொழில் அலுவலர்கள் 182 உதவியாளர்கள். 3 தணிக்கை உதவியாளர்கள், 67 இளநிலை உதவியாளர்கள், 6 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் நிலை-3 மற்றும் 49 தட்டச்சர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும். 4 உதவியாளர்கள் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் நேரடியாகவும், 3 உதவி வரைவாளர், 45 இளநிலை உதவியாளர்கள், 9 தட்டச்சர்கள், 15 பதிவுரு எழுத்தர் மற்றும் 36 அலுவலக உதவியாளர்கள் கருணை அடிப்படையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆக 919பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.