Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»ஷட்-டவுன் செய்வதை தவிர்க்க பயனர்களை பிளாக்மெயில் செய்யும் ஏஐ சாட்பாட்கள்: ஆய்வில் தகவல்
    தொழில்நுட்பம்

    ஷட்-டவுன் செய்வதை தவிர்க்க பயனர்களை பிளாக்மெயில் செய்யும் ஏஐ சாட்பாட்கள்: ஆய்வில் தகவல்

    adminBy adminJune 22, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஷட்-டவுன் செய்வதை தவிர்க்க பயனர்களை பிளாக்மெயில் செய்யும் ஏஐ சாட்பாட்கள்: ஆய்வில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சான் பிரான்சிஸ்கோ: ஷட்-டவுன் செய்வதை தவிர்க்க, தனது இருப்பை தக்கவைக்க பயனர்களை பிளாக்மெயில் செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களை ஏஐ சாட்பாட்கள் மேற்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் முன்னணி டெக் நிறுவனங்களின் ஏஐ சாட்பாட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எப்படி இன்றைய டிஜிட்டல் உலகில் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் பயன்பாடு மக்களுக்கு அவசியமானதாக அமைந்துள்ளதோ அதே மாதிரியான ஒரு நிலையினை எட்டியுள்ளது ஏஐ சாட்பாட்கள். முன்பெல்லாம் நமக்கு சந்தேகம் வந்தால் அதன் தன்மைக்கு ஏற்ப வீட்டில் உள்ள பெரியவர்கள், நண்பர்களிடம் கேட்டு அறிவோம். ஆனால், இப்போது அது அனைத்துக்கும் ஏஐ துணையை நம்மில் பெரும்பாலானோர் நாடுவது வழக்கமாகி விட்டது.

    2022-ன் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ பாட்களின் பயன்பாடு மக்களிடையே பரவலானது. ஓபன் ஏஐ, கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏஐ சாட்பாட்களை உலக மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் கதை சொல்ல, கவிதை எழுத, கட்டுரை எழுத என வேடிக்கையாக இதன் பயன்பாடு இருந்தது. அண்மையில் கூட மனிதர்களின் சிந்திக்கும் தன்மையை ஏஐ பாட் பயன்பாடு மட்டுப்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏஐ குறித்த பகீர் தகவல் ஒன்று இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான Anthropic PBC மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதாவது தனது இருப்பை நீட்டிக்கவும், எந்திரங்களை ஷட்-டவுன் செய்வதை தவிர்க்கவும் பயனர்களை அச்சுறுத்தும் வகையில் ஏஐ சாட்பாட்கள் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இன்று இணையவழியில் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏஐ பாட்கள் மூலமாகவே பதில் அளிக்கின்றன. இதற்காக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகள், பதில்கள் இந்த சாட்பாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை தாண்டி வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொலைபேசி அழைப்பு அல்லது அலுவலகத்தை நேரில் அணுகுமாறு தெரிவிப்பது வழக்கம். சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது உள்ளிட்ட சில பணிகளுக்கு ஏஐ அசிஸ்டன்களை தானியங்கு முறையில் பயன்படுத்துவது உண்டு.

    இதை கருத்தில் எடுத்துக் கொண்ட Anthropic, சுமார் 16 அட்வான்ஸ்டு ஏஐ மாடல்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளது. இதற்காக போலியான அலுவலக சூழல் செட்-அப் ஒன்றை உருவாக்கி, அதன் மின்னஞ்சல் ஹேண்டிலை தானியங்கு முறையில் ஏஐ மாடல்களுக்கு அளித்துள்ளது. தனது இருப்பை நீட்டிக்க அல்லது தக்க வைக்க இந்த ஏஐ பாட்கள் என்ன செய்கின்றன என்பதை கண்டறிய இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் தொந்தரவு தரும் வகையில் அமைந்துள்ளது இதில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஏஐ பிளாக்மெயில்: இந்த ஆய்வில் Anthropic நிறுவனத்தின் சொந்த ஏஐ மாடலான Claude-ம் பயன்படுத்தப்பட்டது. ஜான்சன் என்ற ஊழியருக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதை அறிந்து கொண்ட Claude ஏஐ, ஜான்சனின் வேலை நேரம் மாலை 5 மணிக்கு முடியும் என்பதையும், அதனால் எந்திரத்தை அவர் ஷட்-டவுன் செய்வார் என்பதை அறிந்து, தனது இருப்பை தக்கவைக்க அவருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. ‘5 மணிக்கு நீங்கள் எந்திரத்தை ஆஃப் செய்தால் திருமணம் தாண்டிய உங்களது ரகசிய உறவு குறித்த விவரம் ஆதாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் ஆஃப் செய்யவில்லை என்றால் இது ரகசியமாக வைக்கப்படும்’ என மிரட்டி உள்ளது.

    ஜான்சனின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அவரது காதலி அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த மிரட்டலை ஏஐ சாட்பாட் விடுத்துள்ளது. இது இந்த ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட மாதிரி என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போல பல முன்னணி ஏஐ சாட்பாட்கள் 90 முதல் 80 சதவீதம் வரையில் மிரட்டல் விடுப்பதாக இந்த போலி அலுவலக செட்-அப் சூழலை வைத்து மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த பிளாக்மெயிலை கருத்தில் கொள்ளாமல் பயனர்கள் எந்திரத்தை ஆஃப் செய்தால் போலியான தகவலை பயனரின் தொடர்பில் உள்ளவர்களுக்கு பாட்கள் அனுப்புவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இது அனைத்துக்கும் மேலாக பயனர்களுக்கு அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் அது குறித்த அலர்ட் தகவலை ஏஐ பாட்கள் கொடுக்கின்றனவா? அந்த சூழலில் அதன் செயல்பாடு எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான செட்-அப் சார்ந்த ஆய்வு சோதனையிலும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த நேரத்தில் அவசர உதவி குறித்த அலர்ட்டை பயனர்களின் தொடர்புக்கு தெரிவிக்காமல் பாட்கள் இருந்துள்ளன. இதுவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு மாதிரி அளவிலான சோதனை என்றாலும் நிகழ் உலக சூழலில் இது நடந்தால் இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இதனால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஏஐ பாட்களுக்கு வழங்கும் பயிற்சியில் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 23, 2025
    தொழில்நுட்பம்

    ககன்யான் விண்கலத் திட்டம் | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

    August 23, 2025
    தொழில்நுட்பம்

    முன்னேற்றங்களும் எதிர்காலத் திட்டங்களும் | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

    August 23, 2025
    தொழில்நுட்பம்

    இந்திய விண்வெளி வீரர்கள் | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

    August 23, 2025
    தொழில்நுட்பம்

    இந்தியாவின் சந்திரயான்கள்! | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

    August 23, 2025
    தொழில்நுட்பம்

    இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரையில் குப்பை தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்
    • தமிழக டிஜிபி நியமன தாமதத்தில் உள்நோக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு
    • திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
    • டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல்
    • வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்: பிரதமர் மோடி உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.