Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல், ஈரான் நாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்ப அரசு ஏற்பாடு
    மாநிலம்

    தமிழகத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல், ஈரான் நாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்ப அரசு ஏற்பாடு

    adminBy adminJune 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல், ஈரான் நாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்ப அரசு ஏற்பாடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் அந்நாடுகளில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தர்கள் பாதுகாப்பாக மாநிலம் திரும்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக 24 மணி நேரம் இயங்கக்கூடிய பிரத்யேக கட்டுப்பாட்டு அறை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல்- ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    இந்தச் சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து தமிழகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

    இதற்கென டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 011 24193300 (Land line), செல்போன் எண்: 9289516712 (Mobile Number with Whatsapp) மின்னஞ்சல்: tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com ஆகியவைகளாகும். அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24 மணி நேர, கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளவும். தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவி எண்கள் விவரம்: இந்தியாவுக்குள் 1800 309 3793 என்ற எண்ணையும் வெளிநாடு என்றால் +91 8069009901 / 08069009901 / +91 8069009900 / 08069009900 (Missed Call) ஆகிய எண்களையும் nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

    July 15, 2025
    மாநிலம்

    “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” – செந்தில் பாலாஜி உறுதி

    July 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் 5 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

    July 15, 2025
    மாநிலம்

    கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 15, 2025
    மாநிலம்

    குறிஞ்சிப்பாடி அருகே காலணி தொழிற்பூங்கா; 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    July 15, 2025
    மாநிலம்

    ”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அப்படியே உள்ளன” – அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
    • ஒரு பெண்ணின் மூளைக் கட்டி ஹீட்ஸ்ட்ரோக்கிற்காக தவறாக கருதப்பட்டது: க்ளியோமாக்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூமிக்கு திரும்பிய ஷுபன்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி
    • மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
    • “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” – செந்தில் பாலாஜி உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.