Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது: ‘அரோகரா’ கோஷத்துடன் மக்கள் திரண்டனர்
    ஆன்மீகம்

    மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது: ‘அரோகரா’ கோஷத்துடன் மக்கள் திரண்டனர்

    adminBy adminJune 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது: ‘அரோகரா’ கோஷத்துடன் மக்கள் திரண்டனர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

    மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்தும் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தர உள்ளனர். திருப்பரங்குன்றம் மலைக் கோயில் வடிவத்தில் மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலையிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர், ஆன்மிக அமைப்பினர் வாகனங்களில் மதுரைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு: ஆளுநர் ஆர்​.என்​.ரவி நேற்று காலை மாநாட்டு வளாகத்​துக்கு வந்​தார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.பின்னர் அவர் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்​களில் தரிசனம் செய்​தார். மாநாட்டு திடலில் கூடி​யிருந்த பக்​தர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ஆளுநர் கூறிய​தாவது: தென்​னாடுடைய சிவனே போற்​றி, எந்​நாட்​ட​வருக்​கும் இறைவா போற்றி என்​கிறோம். அந்த சிவனின் குழந்தை முரு​கப் பெரு​மான். அவர் நமது கலாச்​சா​ரத்​தின், பண்​பாட்​டின் அடை​யாளம். நான் அறு​படை வீடு​களுக்​கும் நேரில் சென்று முரு​கப்​பெரு​மானை தரிசனம் செய்​துள்​ளேன். இங்கு அறு​படை வீடு​களை​யும் ஒரே இடத்​தில் தரிசனம் செய்​தது மகிழ்ச்சி அளிக்​கிறது. இந்த மாநாடு அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டது. இதை ஒருங்​கிணைத்த இந்து முன்​னணிக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    July 15, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    July 14, 2025
    ஆன்மீகம்

    14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    நவக்கிரக தோஷம் நீக்கும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி

    July 13, 2025
    ஆன்மீகம்

    விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் – 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக அரசு வஞ்சிக்கலாமா? – ‘சிபில்’ விவகாரத்தில் விவசாயிகள் போராட்டம்
    • ஆப்டிகல் மாயை: இந்த வைரஸ் ஆப்டிகல் மாயையில் 2% மட்டுமே மறைக்கப்பட்ட ‘பி’ ஐ உண்மையில் கண்டுபிடிக்க முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
    • ஒரு பெண்ணின் மூளைக் கட்டி ஹீட்ஸ்ட்ரோக்கிற்காக தவறாக கருதப்பட்டது: க்ளியோமாக்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூமிக்கு திரும்பிய ஷுபன்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.