Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முருக பக்தர்கள் மாநாடு நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முருக பக்தர்கள் மாநாடு நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும், நல்லவர்கள் மக்கள் பணியாற்றும் நிலையை ஏற்படுத்தும்.” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    மதுரை மாவட்டம் வண்டியூர் டோல்கேட் அருகே நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் எம்.பி உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் ராஜாங்கம், பாலசுப்பிரமணியன், மாநில தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலே இரண்டு படை வீடுகள் மதுரையில் இருக்கிறது. அத்தகைய புகழ்பெற்ற புண்ணிய பூமியான மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைத்தும், அதிலே சுவாமி தரிசனம் செய்வதும் சிறப்புக்குரியது. இதனை பக்தர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதில் அரசியல் கிடையாது.

    இருப்பினும், ஆன்மிகம் என்பது மனிதனின் வாழ்வியல் முறைகளை ஒழுக்கப் படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இம்மாநாட்டில் பெருமையாக கூறுகிறேன். தமிழ் கடவுள் முருகன். தமிழ்ப் பற்று உள்ளவர்கள் தமிழ் கடவுள் முருகனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.

    படங்கள்: நா.தங்கரத்தினம்

    அதனடிப்படையில் முருகனுக்கு வணக்கம் செலுத்தவும் தரிசிக்கவும் வந்திருக்கிறேன். ஆன்மிகத்தின் அடிப்டையில் செயல்படும் அனைவரும் முருகனை தரிசிக்க வேண்டும். ஜாதி, மதம், மொழிகள், இனத்திற்கு அப்பாற்பட்டது ஆன்மிகம். இந்த மாநாடு தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்.

    நல்லவர்கள் மக்கள் பணியாற்றும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்ப்பற்று உள்ளவர்கள் வந்திருந்து தரிசிப்பது மகிழ்வைத் தருகிறது. இதுபோன்ற மாநாடுகளுக்கு அரசியல், ஜாதி, மதம் கிடையாது. இது முருக பக்தர்கள் மாநாடாகவே இருக்கட்டும், மசூதியில் எடு்க்கும் விழா, சர்ச்சில் நடைபெறும் விழாவாக இருந்தாலும் ஆன்மிக எண்ணம் உடையவர்கள் நாட்டின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் செயல்படுவர்.

    எத்தகைய இடையூறுகளை இம்மாநாட்டுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறியும் சக்தி ஆன்மிகத்திற்கு உண்டு.” என்று ஜி.கே.வாசன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு

    July 16, 2025
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீடு கோரி 20-ல் விழுப்புரத்தில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

    July 16, 2025
    மாநிலம்

    எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

    July 16, 2025
    மாநிலம்

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்

    July 16, 2025
    மாநிலம்

    மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் பெருமிதம்

    July 16, 2025
    மாநிலம்

    கோயில் சொத்துகளின் வருமானத்தை ஆலய நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: கோர்ட் உத்தரவு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு
    • வன்னியர் இடஒதுக்கீடு கோரி 20-ல் விழுப்புரத்தில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
    • எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்
    • தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்
    • நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேர்க்கடலையின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.