Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: அப்பாவு தகவல்
    மாநிலம்

    ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: அப்பாவு தகவல்

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: அப்பாவு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். தற்போது அங்க போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட மீனவர் பிரதிநிதிகளுடன் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமாரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அப்போது ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து பலர் ஈரான் நாட்டின் தீவுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரான் போர் பிரச்சினையால் அங்கு பணி செய்யும் தமிழக மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

    உவரி பகுதியை சேர்ந்த 36 பேர், ஈரானில் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராதாபுரம், திசையன்விளை வட்டாட்சியர்கள் மூலம் ஈரானில் சிக்கி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

    ஈரானில் உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார். ஈரான் பகுதியில் போர் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தாயகம் அழைத்து வர முதல்வர் தயாராக உள்ளார். கிஸ் தீவில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க அயலக வாரியத்தினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    திருநெல்வேலி மட்டுமின்றி பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஈரானில் இருப்பதால் இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வரின் தனிச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மூலம் ஆன்லைன் மூலம் ஈரானில் இருக்கும் தமிழர்கள் குறித்த தகவலை பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அன்புமணி நீக்கம் பாமகவின் உட்கட்சி பிரச்சினை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு

    September 11, 2025
    மாநிலம்

    பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

    September 11, 2025
    மாநிலம்

    ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான்

    September 11, 2025
    மாநிலம்

    ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

    September 11, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் கால்பதிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி!” – பிருந்தா காரத் கருத்து

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்புமணி நீக்கம் பாமகவின் உட்கட்சி பிரச்சினை: நயினார் நாகேந்திரன்
    • ஒவ்வொரு நாளும் உங்கள் காலை உணவை மீண்டும் மீண்டும் செய்வது: இது ஆரோக்கியமானதா அல்லது தீங்கு விளைவிக்கும்; வல்லுநர்கள் பரிந்துரைப்பது இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பாகிஸ்தானின் நவாஸ்தான் இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்’ – மைக் ஹெசன் கருத்து
    • வானிலை முன்னறிவிப்பு: கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு
    • யு.எஸ். சட்டவிரோத வாப்ஸில் விரிசல்: எஃப்.டி.ஏ, சிபிபி பிளாக் ஏற்றுமதி .5 86.5 மில்லியன் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.