Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு
    மாநிலம்

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

    adminBy adminJune 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

    பின்னர், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்தார். பொன்முடி தரப்பில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வாகவும், திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கபட்டிருப்பதையும், தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    பொன்முடி தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து இன்று உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்லீரல் மீளுருவாக்கம்: கல்லீரலின் மீளுருவாக்கம் செய்யும் திறனைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குணப்படுத்துவது எப்போது சாத்தியம் மற்றும் அது இல்லாதபோது இங்கே உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஓக்ரா வாட்டர் நன்மைகள்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பும் மக்களுக்கு ஓக்ரா நீர் ஒரு செல்ல வேண்டிய பானமாக மாறுவதற்கான 5 காரணங்கள்
    • இந்த அரிய இமாலய “சிக்கிம் சுந்தரி” பற்றிய ஆனந்த் மஹிந்திராவின் பதிவு எப்படி சரியான பயண உத்வேகம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • HbA1c 6%க்கு மேல்? இரத்தச் சர்க்கரையின் அளவைத் தாண்டிய சோதனைகளை சிறுநீரக மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார்
    • பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க 7 அமைதியான வாசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.