Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“பிரதமர் மோடி முழக்கங்களில் நிபுணர்; தீர்வுகளில் அல்ல” – ராகுல் காந்தி விமர்சனம்
    தேசியம்

    “பிரதமர் மோடி முழக்கங்களில் நிபுணர்; தீர்வுகளில் அல்ல” – ராகுல் காந்தி விமர்சனம்

    adminBy adminJune 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பிரதமர் மோடி முழக்கங்களில் நிபுணர்; தீர்வுகளில் அல்ல” – ராகுல் காந்தி விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முழக்கங்களை வழங்குவதில் நிபுணராக இருப்பதாகவும், ஆனால் தீர்வுகளில் அல்ல என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற மத்திய அரசின் முழக்கம், அதிக அளவில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆக குறைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், அதிக அளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்பதற்கான உறுதியை அளித்தது. ஆனால், உற்பத்தி ஏன் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது, இளைஞர்களின் வேலையின்மை ஏன் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது, சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?

    பிரதமர் மோடி முழக்கங்களை வழங்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் அல்ல. 2014 முதல், உற்பத்தி நமது பொருளாதாரத்தில் 14% ஆகக் குறைந்துள்ளது.

    திறமையான, அறிவார்ந்த, நம்பிக்கை அளிக்கக்கூடிய ஷிவாம், சைஃப் ஆகியோரை புதுடெல்லியின் நேரு பிளேஸில் சந்தித்தேன். ஆனால், அவர்கள் தங்களின் (தொழில் தொடங்குவதற்கான) திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

    உண்மை அப்பட்டமானது. அரசு இறக்குமதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் பெருகுவதில் அல்ல. இறுக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது.

    புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்துவிட்டார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமும் இப்போது அமைதியாக பின்வாங்கப்படுகிறது.

    நேர்மையான சீர்திருத்தங்கள் மூலமும், நிதி உதவி அளிப்பதன் மூலமும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்குத் தேவை.

    மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் இங்கே நிறுவனங்களை உருவாக்கவில்லை என்றால், இறக்குமதி தொடரும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    June 30, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: 3 பேர் உயிரிழப்பு; 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா

    June 30, 2025
    தேசியம்

    ‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

    June 30, 2025
    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    தேசியம்

    ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லூயிஸ் உய்ட்டன் குரூஸ் வடிவ கடை: லூயிஸ் உய்ட்டன் அதன் ஒரே பயண வடிவ கடையைத் திறந்தது, அதன் இருப்பிடம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
    • அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
    • தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு
    • எடை குறைக்க வேண்டுமா? நீங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.