சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 9-வது நாளினை எட்டியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 21) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,235-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.55 என குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இன்று தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இன்று சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,075-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.